Wednesday, July 23, 2014
திருப்பூர், : திருப்பூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு கட்டடம் கட்ட அரசு நிலத்தை ஒதுக்க வேண்டும் என பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூரை அடுத்துள்ள செவந்தாம்பாளையம் பகுதி பொதுமக்கள் கலெக்டர் கோவிந்தராஜிடம் அளித்த மனுவில்: செவந்தாம்பாளையம் கிராமத்தில் செல்வ விநாயகர் கல்வி நிலையம் என்ற பெயரில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, கடந்த 1936ம் ஆண்டு முதல் தொடர்ந்து 78 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
5ம் வகுப்பு வரை மட்டுமே உள்ள இப்பள்ளி சுமார் 7 சென்ட் நிலத்தில் மட்டுமே செயல்பட்டு வருவதால் கூடுதல் வகுப்பறைகள் கட்ட முடியாமல் மேல் வகுப்பு தொடங்க இயலாத சூழல் உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு பொதுமக்கள் சார்பில் பள்ளி கட்டிடத்தை நிர்வாகம் செய்து, பள்ளியை தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
மேலும் முத்தணம்பாளையம் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில், அப்பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலமான 1.75 ஏக்கர் நிலத்தை பள்ளிக் கட்டிடத்தை விரிவு படுத்துவதற்காக வழங்கலாம் என தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு கலெக்டரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு சிலர் மேற்படி இடத்தை ஆக்கிரமிக்க மேற்கொண்ட முயற்சியை தொடர்ந்து ஆர்.டி.ஓ., தலைமையில் நடந்த கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டு இடத்தை பள்ளி கட்டிடத்திற்கு வழங்கவே வலியுறுத்தினர்.
தற்போது அப்பகுதியில் ரிங் ரோடு அமைக்கப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், பள்ளிக்கு அருகிலேயே அதிகளவு வாகனங்கள் செல்கின்றன. இதனால் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
அதோடு அரசு நிலத்தின் ஒரு பகுதி வனத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. மேற்படி வனத்துறை பயன்பாட்டிற்கு போக மீதி உள்ள இடத்தில், புதிய பள்ளிக் கட்டிடம் கட்டி கூடுதல் வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதோடு, கல்வித்தரமும் உயர வழி ஏற்படும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment