Thursday, July 24, 2014
On Thursday, July 24, 2014 by Anonymous in Sivaganga
காரைக்குடி டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் போக்குவரத்து காவல்துறை மற்றும் மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாதெமி ஆகியவை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாம் தொடக்க விழாவில் காரைக்குடி டி.எஸ்.பி முருகேஷ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஹேமாமாலினி தலைமை வகித்தார். மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாதெமியின் நிறுவனர் ஏ. நரசிம்மன் சாலை விபத்து நடப்பதற்கான காரணம், அதனை தவிர்ப்பது குறித்தும், தற்காப்புடன் வாகனங்களை செலுத்துவது குறித்தும் விடியோ படக்காட்சியுடன் மாணவிகளுக்கு விளக்கினார்.
காரைக்குடி போக்குவத்து காவல் ஆய்வாளர் பி. ரெத்தினம், சார்பு ஆய்வாளர் ஏ. வில்லியம் பெஞ்சமின், சாலைப் பாதுகாப்புப்படை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்மணி மாறன் ஆகியோர் பேசினர்.
முடிவில் விபத்து என்னால் ஏற்படாது என்றும் எந்த விபத்திற்கும் நான் காரணமாக இருக்கமாட்டேன் என்றும் அனைத்து மாணவிகளும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை காரைக்குடி போக்குவரத்து காவல்துறையினர் செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment