Thursday, July 24, 2014
On Thursday, July 24, 2014 by Anonymous in Theni
போடி அருகே, விவசாய நிலங்களில் மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செயல்முறை விளக்க ஆய்வு மேற்கொண்டனர்.
வேளாண்மைக் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் கிராமங்களில் தங்கி விவசாயம் குறித்த செயல்முறை விளக்கம் பெற வேண்டும். இத்திட்டத்தின் கீழ் மதுரை வேளாண் கல்லூரியில் பயிலும் மாணவிகள் ஹேமாவதி, இத்திஸ்ரீ, கலைவாணி, கலாமணி, கார்த்திகா, கார்த்திகேயணி, மீனா, மீனாபிரியா ஆகிய மாணவிகள் போடி அருகே கோடாங்கிபட்டியில் செயல்முறை விளக்க ஆய்வு மேற்கொண்டனர்.
இத்திட்டத்தின் கீழ் தென்னை மரத்திற்கு டானிக் பயன்படுத்தும் முறை, மண் மாதிரி எடுக்கும் முறை, விதை நேர்த்தி செய்யும் முறை அவற்றின் முக்கியத்துவம் பற்றி செயல்விளக்கம் பெற்றனர். மேலும் விவசாயிகளுக்கும் செய்து காட்டி விளக்கினர்.
இதேபோல் கனுப்புழு பாதிப்பைத் தடுக்கும் முறைகளையும் எடுத்துக்கூறினர். விவசாயிகள் விவசாயம் செய்யும் முறைகளையும் அறிந்து குறிப்பெடுத்துக் கொண்டனர்.
மாணவிகளுக்கு போடி வேளாண்மை உதவி அலுவலர் அப்புசாமி வழிகாட்டினார். கோடாங்கிபட்டி விவசாயிகள் பங்கேற்று மாணவிகளிடம் செயல்முறை விளக்கம் பெற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
0 comments:
Post a Comment