Thursday, July 24, 2014

On Thursday, July 24, 2014 by Anonymous in    
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வால்பாறையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்கிறது. இதன் காரணமாக வால்பாறையில் உள்ள கல்லூரி மற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை மீறிச் செயல்படும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் கூறியிருப்பதாக வால்பாறை வட்டாட்சியர் என்.நேரு தெரிவித்தார்.

0 comments: