Saturday, August 16, 2014

400 ஆண்டுகள் பழமையான அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோவிலை முதலமைச்சரின் அன்னதான விரிவாக்க திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற முனியாண்டி சுவாமி கோவில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதுபோக மதுரைக்கு வரும் பக்தர்கள் மீனாட்சியம்மன்கோவில், அழகர் கோவில் உள்ளிட்ட ஸ்தலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அலங்காநல்லூரில் உள்ள முனியாண்டி சுவாமி கோவிலுக்கும் வந்து செல்கின்றனர். உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு ஆண்டுதோறும் நடைபெறும்போது முனியாண்டி சுவாமிக்கு முதல் பூஜையும், மரியாதை செய்த பின்னரே தொடங்கப்படுவது தொன்று தொட்டு இன்றளவும் வழக்கத்தில் உள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 106 கோவில்கள் அன்னதான திட்டத்தில் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். இதில் அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோவிலும் சேர்க்கப்பட வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்கள், பக்தர்கள் அனைவரும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
[8/31, 12:15 AM] Brabhu Palladam: திருப்பூர் அனுப்பர்பாளையம் பனியன் தொழிலாளி மணிமாறன் என்பவரது கடைசிமகள் ஜெய்வாபாய் பள்ளிபிளஸ் ஒன் மாணவி பி...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
0 comments:
Post a Comment