Saturday, August 16, 2014

400 ஆண்டுகள் பழமையான அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோவிலை முதலமைச்சரின் அன்னதான விரிவாக்க திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற முனியாண்டி சுவாமி கோவில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதுபோக மதுரைக்கு வரும் பக்தர்கள் மீனாட்சியம்மன்கோவில், அழகர் கோவில் உள்ளிட்ட ஸ்தலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அலங்காநல்லூரில் உள்ள முனியாண்டி சுவாமி கோவிலுக்கும் வந்து செல்கின்றனர். உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு ஆண்டுதோறும் நடைபெறும்போது முனியாண்டி சுவாமிக்கு முதல் பூஜையும், மரியாதை செய்த பின்னரே தொடங்கப்படுவது தொன்று தொட்டு இன்றளவும் வழக்கத்தில் உள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 106 கோவில்கள் அன்னதான திட்டத்தில் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். இதில் அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோவிலும் சேர்க்கப்பட வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்கள், பக்தர்கள் அனைவரும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment