Saturday, August 16, 2014

400 ஆண்டுகள் பழமையான அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோவிலை முதலமைச்சரின் அன்னதான விரிவாக்க திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற முனியாண்டி சுவாமி கோவில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதுபோக மதுரைக்கு வரும் பக்தர்கள் மீனாட்சியம்மன்கோவில், அழகர் கோவில் உள்ளிட்ட ஸ்தலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அலங்காநல்லூரில் உள்ள முனியாண்டி சுவாமி கோவிலுக்கும் வந்து செல்கின்றனர். உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு ஆண்டுதோறும் நடைபெறும்போது முனியாண்டி சுவாமிக்கு முதல் பூஜையும், மரியாதை செய்த பின்னரே தொடங்கப்படுவது தொன்று தொட்டு இன்றளவும் வழக்கத்தில் உள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 106 கோவில்கள் அன்னதான திட்டத்தில் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். இதில் அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோவிலும் சேர்க்கப்பட வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்கள், பக்தர்கள் அனைவரும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment