Thursday, August 14, 2014
அறிவியலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் கருவியாக
நாட்டுப்புறக் கலைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று, பாபா அணு ஆராய்ச்சி
மைய (சென்னை) முதுநிலை விஞ்ஞானி ஜே. டேனியல் செல்லப்பா கூறினார்.
நாட்டுப்புறக் கலைகளின் வழியாக அறிவியல் கருத்துகளைப் பரப்புதல் என்ற தலைப்பில், மதுரை யாதவர் கல்லூரியில் நான்கு நாள்கள் நடைபெறும் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது. இக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து, விஞ்ஞானி டேனியல் செல்லப்பா பேசியது:
அறிவியல்தான் அனைத்துக்கும் அடிப்படையாக இருக்கிறது. அறிவியல் இல்லையெனில் எந்தவொரு பொறியியலும், தொழில்நுட்பமும் கிடையாது. அறிவியல் கண்டுபிடிப்புகளையும், சாதனைகளையும் மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு செல்லும்போதுதான், அத்தகைய கண்டுபிடிப்புகள் முழுமையடைகின்றன.
அந்த வகையில் பாபா அணு ஆராய்ச்சி நிலையும், அணு ஆராய்ச்சி மட்டுமின்றி மக்களுக்குத் தேவையான விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளிலும் பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, பயறு வகைகளில் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றான நிலக்கடலை ரகம், சிறைத் துறைக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இதில், சிறைவாசிகள் பயிரிட்டதில், ஒரு ஹெக்டேருக்கு ரூ. 2 லட்சம் நிகர லாபம் ஈட்டியுள்ளனர். இதேபோல், குறைந்த தண்ணீரைக் கொண்டு மேற்கொள்ளும் சாகுபடி தொழில்நுட்பங்கள், திடக்கழிவு மேலாண்மைத் தொழில்நுட்பம் போன்றவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அவற்றை மக்களால் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய முறையில் கொண்டு சேர்க்கும்போதுதான், அதன் நோக்கம் நிறைவேறுகிறது.
இத்தகைய அறிவியல் தொழில்நுட்பங்களை மக்களுக்குக் கொண்டு செல்லக்கூடிய ஒரு கருவியாக நாட்டுப்புறக் கலைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.
கருத்தரங்கின் முதன்மை நெறியாளர் பி.எஸ். நவராஜ், புதுச்சேரி பல்கலைக்கழக மானுடவியல் துறைத் தலைவர் ஏ. செல்லபெருமாள், யாதவர் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எஸ். தனசேகரன், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் வி. கோபால் உள்ளிட்டோர் பேசினர்.
நாட்டுப்புறக் கலைகளின் வழியாக அறிவியல் கருத்துகளைப் பரப்புதல் என்ற தலைப்பில், மதுரை யாதவர் கல்லூரியில் நான்கு நாள்கள் நடைபெறும் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது. இக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து, விஞ்ஞானி டேனியல் செல்லப்பா பேசியது:
அறிவியல்தான் அனைத்துக்கும் அடிப்படையாக இருக்கிறது. அறிவியல் இல்லையெனில் எந்தவொரு பொறியியலும், தொழில்நுட்பமும் கிடையாது. அறிவியல் கண்டுபிடிப்புகளையும், சாதனைகளையும் மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு செல்லும்போதுதான், அத்தகைய கண்டுபிடிப்புகள் முழுமையடைகின்றன.
அந்த வகையில் பாபா அணு ஆராய்ச்சி நிலையும், அணு ஆராய்ச்சி மட்டுமின்றி மக்களுக்குத் தேவையான விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளிலும் பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, பயறு வகைகளில் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றான நிலக்கடலை ரகம், சிறைத் துறைக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இதில், சிறைவாசிகள் பயிரிட்டதில், ஒரு ஹெக்டேருக்கு ரூ. 2 லட்சம் நிகர லாபம் ஈட்டியுள்ளனர். இதேபோல், குறைந்த தண்ணீரைக் கொண்டு மேற்கொள்ளும் சாகுபடி தொழில்நுட்பங்கள், திடக்கழிவு மேலாண்மைத் தொழில்நுட்பம் போன்றவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அவற்றை மக்களால் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய முறையில் கொண்டு சேர்க்கும்போதுதான், அதன் நோக்கம் நிறைவேறுகிறது.
இத்தகைய அறிவியல் தொழில்நுட்பங்களை மக்களுக்குக் கொண்டு செல்லக்கூடிய ஒரு கருவியாக நாட்டுப்புறக் கலைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.
கருத்தரங்கின் முதன்மை நெறியாளர் பி.எஸ். நவராஜ், புதுச்சேரி பல்கலைக்கழக மானுடவியல் துறைத் தலைவர் ஏ. செல்லபெருமாள், யாதவர் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எஸ். தனசேகரன், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் வி. கோபால் உள்ளிட்டோர் பேசினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...
0 comments:
Post a Comment