Saturday, August 23, 2014
கோரிக்கை மனு
இதுகுறித்து தடப்பள்ளி–அரக்கன்கோட்டை–பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் தளபதி தமிழக வருவாய்த்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–
மாநில அளவில் 1,267 உள்வட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு உள்வட்டத்திற்கும் ஒரு நில அளவர்கள் (சர்வேயர்) நியமிக்கப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தில் 1,267 உள்வட்டத்திற்கு 800–க்கும் குறைவான நில அளவர்கள் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, சத்தியமங்கலம், அந்தியூர், பவானி ஆகிய தாலுகாக்களில் மொத்தம் 35 உள்வட்டங்கள் உள்ளன. மாவட்டத்தில் சுமார் 20 நில அளவர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்கள்.
நில அளவர்கள்
விவசாயிகளுடைய நிலம் சார்ந்த பிரச்சினைகள், நீர் வழித்தடங்களில் உள்ள பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. நில அளவர்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ளதால் நில அளவீடு பணிகளுக்கு விவசாயிகள் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை நில அளவீடு (சர்வே) செய்து “அளவீடு கற்கள்“ நட வேண்டும். நில அளவீடு செய்வதற்கு புவியியல் தொழில்நுட்பம் (ஜி.பி.எஸ்.), சி.ஸ்டார் எனப்படும் தொழில்நுட்பம் என பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன. புவியியல் தொழில்நுட்ப கருவிகள் ஈரோடு மாவட்ட நில அளவர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. இந்த முறையை பயன்படுத்தி நில அளவீட்டு பிரச்சினையை சரிசெய்ய வருவாய்த்துறை முயற்சி செய்ய வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நில அளவர்களின் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment