Saturday, August 23, 2014
தந்தை இறப்பு
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே உள்ள கனகபுரம் செலம்பன்பாறை தோட்டத்தில் வசித்து வருபவர் நடராஜ் (வயது 48). இவர் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். நடராஜின் தந்தை குப்புசாமி. இவர் கிராம நிர்வாக அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்த நிலையில் தந்தை குப்புசாமியின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக நடராஜ் வீட்டில் ஏ.டி.எம். கார்டை பார்த்தார். ஆனால் ஏ.டி.எம். கார்டை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர் சம்மந்தப்பட்ட வங்கிக்கு சென்று தந்தையின் கணக்குகளை சரி பார்த்தார். அப்போது அதில் கடந்த 3 மாதங்களில் யாரோ ரூ.16,400 பணம் எடுத்து இருந்தது தெரிய வந்தது. இதனால் நடராஜ் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் வெள்ளோடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
வாலிபர் கைது
விசாரணையில் நடராஜின் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை பார்த்த திருச்சியைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்கிற சிவா (வயது 26) என்பவர், நடராஜின் தந்தை குப்புசாமியின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் சிவாவை தேடி வந்தனர். இந்த நிலையில் சிவா வேலாம்பாளையத்தில் உள்ள ஒரு கயிறு திரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருவது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சிவாவை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் குப்புசாமி இறப்பதற்கு முன் அவருடைய வங்கி ஏ.டி.எம். மின் ரகசிய எண்ணை (பாஸ்வேர்ட்) சிவாவிடம் கூறியுள்ளார். குப்புசாமி இறந்த பின்பு வீட்டின் அலமாரியில் இருந்த அவருடைய ஏ.டி.எம். கார்டை திருடி கடந்த 3 மாதங்களாக சிவா பணம் எடுத்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் சிவாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிவா பெருந்துறை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment