Monday, August 25, 2014
சூர்யாவின்
அஞ்சான் படுதோல்வி காரணமாக அவருடைய சகோதரர் நடித்து அடுத்த வாரம்
வெளியாவதாக இருந்த ‘மெட்ராஸ்’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது.கார்த்தி, கேத்ரீன் தெரசா நடிப்பில் அட்டக்கத்தி ரஞ்சித்
இயக்கிய திரைப்படம் ‘மெட்ராஸ்’. இந்த திரைப்படம் வரும் 29ஆம் தேதி ரிலீஸாக
இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சூர்யாவின் அஞ்சான் பலத்த
தோல்வி அடைந்ததால் அவருடைய சகோதரர் தனது படத்தின் ரிலீஸை ஒத்தி வைக்க
கூறியதாகவும், அதன் காரணமாக படத்தின் ரிலீஸ் செப்டம்பர் இரண்டாவது
வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவருக்கும் ஒரே மாதிரியான ரசிகர்கள்
இருப்பதால் அஞ்சான் படத்தின் தோல்வி மெட்ராஸ் படத்தையும் பாதிக்கும் என்ற
எண்ணத்தில்தான் மெட்ராஸ் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் மெட்ராஸ் படக்குழுவினர் இந்த தகவலை மறுத்துள்ளனர். படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இன்னும் முடியவில்லை என்றும், அந்த பணிகள் முடிந்து பின்னர் சென்சாருக்கு அனுப்ப இன்னும் 15 தினங்கள் ஆகும் என்ற காரணத்தினால்தான் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தின் ரிலீஸுக்கும் அஞ்சான் படத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
ஏற்கனவே கார்த்தி சகுனி, அலெக்ஸ்பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி ஆகிய நான்கு தொடர் தோல்விப்படங்களை கொடுத்துள்ளதால் அவர் முழுக்க முழுக்க மெட்ராஸ் படத்தை நம்பிதான் உள்ளார். இந்த படமும் தோல்வி அடைந்துவிட்டால் அவருடைய மார்க்கெட் படுபாதளத்திற்கு சென்றுவிடும் என்று கோலிவுட்டில் கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...
0 comments:
Post a Comment