Monday, August 25, 2014
சூர்யாவின்
அஞ்சான் படுதோல்வி காரணமாக அவருடைய சகோதரர் நடித்து அடுத்த வாரம்
வெளியாவதாக இருந்த ‘மெட்ராஸ்’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது.கார்த்தி, கேத்ரீன் தெரசா நடிப்பில் அட்டக்கத்தி ரஞ்சித்
இயக்கிய திரைப்படம் ‘மெட்ராஸ்’. இந்த திரைப்படம் வரும் 29ஆம் தேதி ரிலீஸாக
இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சூர்யாவின் அஞ்சான் பலத்த
தோல்வி அடைந்ததால் அவருடைய சகோதரர் தனது படத்தின் ரிலீஸை ஒத்தி வைக்க
கூறியதாகவும், அதன் காரணமாக படத்தின் ரிலீஸ் செப்டம்பர் இரண்டாவது
வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவருக்கும் ஒரே மாதிரியான ரசிகர்கள்
இருப்பதால் அஞ்சான் படத்தின் தோல்வி மெட்ராஸ் படத்தையும் பாதிக்கும் என்ற
எண்ணத்தில்தான் மெட்ராஸ் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் மெட்ராஸ் படக்குழுவினர் இந்த தகவலை மறுத்துள்ளனர். படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இன்னும் முடியவில்லை என்றும், அந்த பணிகள் முடிந்து பின்னர் சென்சாருக்கு அனுப்ப இன்னும் 15 தினங்கள் ஆகும் என்ற காரணத்தினால்தான் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தின் ரிலீஸுக்கும் அஞ்சான் படத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
ஏற்கனவே கார்த்தி சகுனி, அலெக்ஸ்பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி ஆகிய நான்கு தொடர் தோல்விப்படங்களை கொடுத்துள்ளதால் அவர் முழுக்க முழுக்க மெட்ராஸ் படத்தை நம்பிதான் உள்ளார். இந்த படமும் தோல்வி அடைந்துவிட்டால் அவருடைய மார்க்கெட் படுபாதளத்திற்கு சென்றுவிடும் என்று கோலிவுட்டில் கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment