Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
ரஜினியுடன் நடிப்பவர்கள் அவரைப் பற்றி வியந்து பேட்டியளிப்பது சாதாரணமாக நடக்கக் கூடியது. சோனாக்ஷி சின்கா ஒருபடி மேல். ரஜினியுடன் நடித்ததையும், அதனால் தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தையும் உணர்ச்சியுடன் மும்பையில் பேட்டியளித்துள்ளார். அது பற்றிய ஒரு தொகுப்பு இங்கே.

சல்மான் கான், அக்ஷய் குமார், அஜய் தேவ் கான், ஷாகித் கபூருடன் சோனாக்ஷி நடித்துள்ளார். அப்போதெல்லாம் தெரியாத பல விஷயங்களை ரஜினியுடன் நடித்த போது தெரிந்து கொண்டதாகவும், அவர் ஒரு மகானைப் போன்றவர் எனவும் சோனாக்ஷி பேட்டியில் கூறியுள்ளார்.
"வாழ்க்கையில் சில மகான்களால் நம்மையறியாமல் நமக்குள் சில மாற்றங்கள் ஏற்படும். அப்படியொரு மாற்றத்தை ரஜினியுடன் நடித்த போது எனக்குள் அனுபவப்பட்டேன்.
ரஜினியுடன் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் விலைமதிப்பற்றவை. படிப்படியாக முன்னேறி உயரத்துக்கு சென்றுவிட்ட மகான் அவர். என்னிடம் அவர் தனது அனுபவங்களைச் சொன்னார். அதன் மூலம் எனக்குள்ளும் ஆன்மீகம் சம்பந்தமான பக்தி விதையை அவர் விதைத்துவிட்டார். கேமராவுக்கு முன்னால் உள்ள ரஜினியும், அதற்குப் பின்னே உள்ள ரஜினியும் வேறு வேறானவர்கள். அவரால் நான் மாறிவிட்டேன்" என சோனாக்ஷி சின்கா பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சோனாக்ஷி சின்கா லிங்கா படத்தில் ரஜினியுடன் நடித்துள்ளார். டிசம்பர் 12 ரஜினியின் பிறந்தநாள் அன்று இந்தப் படம் திரைக்கு வருகிறது.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...