Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
ரஜினியுடன் நடிப்பவர்கள் அவரைப் பற்றி வியந்து பேட்டியளிப்பது சாதாரணமாக நடக்கக் கூடியது. சோனாக்ஷி சின்கா ஒருபடி மேல். ரஜினியுடன் நடித்ததையும், அதனால் தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தையும் உணர்ச்சியுடன் மும்பையில் பேட்டியளித்துள்ளார். அது பற்றிய ஒரு தொகுப்பு இங்கே.

சல்மான் கான், அக்ஷய் குமார், அஜய் தேவ் கான், ஷாகித் கபூருடன் சோனாக்ஷி நடித்துள்ளார். அப்போதெல்லாம் தெரியாத பல விஷயங்களை ரஜினியுடன் நடித்த போது தெரிந்து கொண்டதாகவும், அவர் ஒரு மகானைப் போன்றவர் எனவும் சோனாக்ஷி பேட்டியில் கூறியுள்ளார்.
"வாழ்க்கையில் சில மகான்களால் நம்மையறியாமல் நமக்குள் சில மாற்றங்கள் ஏற்படும். அப்படியொரு மாற்றத்தை ரஜினியுடன் நடித்த போது எனக்குள் அனுபவப்பட்டேன்.
ரஜினியுடன் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் விலைமதிப்பற்றவை. படிப்படியாக முன்னேறி உயரத்துக்கு சென்றுவிட்ட மகான் அவர். என்னிடம் அவர் தனது அனுபவங்களைச் சொன்னார். அதன் மூலம் எனக்குள்ளும் ஆன்மீகம் சம்பந்தமான பக்தி விதையை அவர் விதைத்துவிட்டார். கேமராவுக்கு முன்னால் உள்ள ரஜினியும், அதற்குப் பின்னே உள்ள ரஜினியும் வேறு வேறானவர்கள். அவரால் நான் மாறிவிட்டேன்" என சோனாக்ஷி சின்கா பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சோனாக்ஷி சின்கா லிங்கா படத்தில் ரஜினியுடன் நடித்துள்ளார். டிசம்பர் 12 ரஜினியின் பிறந்தநாள் அன்று இந்தப் படம் திரைக்கு வருகிறது.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...