Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
ரஜினியுடன் நடிப்பவர்கள் அவரைப் பற்றி வியந்து பேட்டியளிப்பது சாதாரணமாக நடக்கக் கூடியது. சோனாக்ஷி சின்கா ஒருபடி மேல். ரஜினியுடன் நடித்ததையும், அதனால் தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தையும் உணர்ச்சியுடன் மும்பையில் பேட்டியளித்துள்ளார். அது பற்றிய ஒரு தொகுப்பு இங்கே.

சல்மான் கான், அக்ஷய் குமார், அஜய் தேவ் கான், ஷாகித் கபூருடன் சோனாக்ஷி நடித்துள்ளார். அப்போதெல்லாம் தெரியாத பல விஷயங்களை ரஜினியுடன் நடித்த போது தெரிந்து கொண்டதாகவும், அவர் ஒரு மகானைப் போன்றவர் எனவும் சோனாக்ஷி பேட்டியில் கூறியுள்ளார்.
"வாழ்க்கையில் சில மகான்களால் நம்மையறியாமல் நமக்குள் சில மாற்றங்கள் ஏற்படும். அப்படியொரு மாற்றத்தை ரஜினியுடன் நடித்த போது எனக்குள் அனுபவப்பட்டேன்.
ரஜினியுடன் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் விலைமதிப்பற்றவை. படிப்படியாக முன்னேறி உயரத்துக்கு சென்றுவிட்ட மகான் அவர். என்னிடம் அவர் தனது அனுபவங்களைச் சொன்னார். அதன் மூலம் எனக்குள்ளும் ஆன்மீகம் சம்பந்தமான பக்தி விதையை அவர் விதைத்துவிட்டார். கேமராவுக்கு முன்னால் உள்ள ரஜினியும், அதற்குப் பின்னே உள்ள ரஜினியும் வேறு வேறானவர்கள். அவரால் நான் மாறிவிட்டேன்" என சோனாக்ஷி சின்கா பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சோனாக்ஷி சின்கா லிங்கா படத்தில் ரஜினியுடன் நடித்துள்ளார். டிசம்பர் 12 ரஜினியின் பிறந்தநாள் அன்று இந்தப் படம் திரைக்கு வருகிறது.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
-
சேரம்பாடி பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக 2 கும்கி யானைகள் மூலம் தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். கா...