Wednesday, August 20, 2014
திருப்பூர், : திருப்பூர் பகுதியில் பெண்களை கேலி செய்த நைஜீரிய வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
திருப்பூர் ராயபுரம் தெற்கு பகுதியில் நைஜீரிய வாலிபர்கள் தங்கி செகன்ட் பீஸ் பனியன் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வேலைக்கு சென்று வரும் பெண்களை நைஜீரிய வாலிபர்கள் கேலி, கிண்டல் செய்தும் தொந்தரவு கொடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று சில பெண்களை இவர்கள் மிகவும் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், நைஜீரிய வாலிபர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு நைஜீரிய வாலிபர் ஒரு பெண்ணை அடித்து ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அங்கிருந்த 6 நைஜீரிய வாலிபர்களையும் திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் நைஜீரிய வாலிபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...

0 comments:
Post a Comment