Wednesday, August 20, 2014
திருப்பூர், : திருப்பூர் பகுதியில் பெண்களை கேலி செய்த நைஜீரிய வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
திருப்பூர் ராயபுரம் தெற்கு பகுதியில் நைஜீரிய வாலிபர்கள் தங்கி செகன்ட் பீஸ் பனியன் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வேலைக்கு சென்று வரும் பெண்களை நைஜீரிய வாலிபர்கள் கேலி, கிண்டல் செய்தும் தொந்தரவு கொடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று சில பெண்களை இவர்கள் மிகவும் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், நைஜீரிய வாலிபர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு நைஜீரிய வாலிபர் ஒரு பெண்ணை அடித்து ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அங்கிருந்த 6 நைஜீரிய வாலிபர்களையும் திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் நைஜீரிய வாலிபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment