Saturday, August 23, 2014
ஈரோடு ரெயில் நிலையத்தில், நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுபரன்சு தெரிவித்தார்.
கோட்ட மேலாளர் சோதனை
ஈரோடு ரெயில் நிலையம் அருகே ரெயில் என்ஜின் பணிமனைகள் இயங்கி வருகின்றன. எலக்ட்ரிக் லோகோ பணிமனை ஒரு புறமும், டீசல் லோகோ பணிமனை ஒருபுறமும் இயங்கி வருகிறது. இருப்பினும் ஈரோட்டில் இருந்து செல்லும் ரெயில்களில் உள்ள என்ஜின்கள் அடிக்கடி பழுதாகி வருவது தொடர்ந்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஈரோட்டில் இருந்து புறப்பட்டு சென்ற சரக்கு ரெயில்கள் நடுவழியில் என்ஜின் பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பிற பயணிகள் ரெயில்களும் தாமதமாகி சென்றன.
இந்தநிலையில் சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுபரன்சு நேற்று ஈரோடு ரெயில் நிலையத்தில் திடீர் சோதனை நடத்தினார்.
உத்தரவு
ஈரோடு ரெயில் நிலைய சரக்கு ரெயில் நிறுத்தும் பகுதி, ஈரோடு டீசல் என்ஜின் பணிமனைகளில் அவர் திடீர் சோதனை நடத்தி அங்கு பார்வையிட்டார். அப்போது என்ஜின்களை முழுமையாக பராமரித்து எந்த தடங்கலும் இல்லாமல் ரெயில்கள் ஓடச்செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக அவர் உயர் அதிகாரிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தினார். பின்னர் கோட்ட ரெயில்வே மேலாளர் சுபரன்சு நிருபர்களிடம் கூறியதாவது:–
கூடுதல் பணிமனை
ரெயில் பெட்டிகள், சரக்கு ரெயில் பெட்டிகளை பராமரிப்பது. ரெயில் என்ஜின்கள் பராமரிப்பு மற்றும் தண்ணீர் வினியோகம் ஆகியவை தடங்கலின்றி நடப்பது குறித்து ஆய்வு நடந்தது. ஈரோடு டீசல் லோகோ செட்டில் அதிக அளவில் என்ஜின்கள் பழுது பார்க்கப்பட்டு வருகின்றன. எனவே இங்கு கூடுதலாக ஒரு பணிமனை பிரிவு உருவாக்கப்படும். இதற்கான திட்டம் ரெயில்வே துறைக்கு அனுப்பப்பட்டு விரைவில் ஒப்புதல் பெறப்பட உள்ளது.
இதுபோல் ரெயில் நிலையத்துக்கான லிப்ட், நகரும் படிக்கட்டு பணிகளும் விரைவில் தொடங்கும். ரெயில்வே ஆஸ்பத்திரி கட்டிட பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
ரெயில் நிற்குமா?
திருப்பதிக்கு அதிக அளவில் ரெயில்கள் உள்ளன. எனவே கோவை–திருப்பதி ரெயிலை ஈரோடு ரெயில் நிலையத்தில் நிறுத்துவது தொடர்பாக அமைச்சகம்தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுபரன்சு கூறினார். ஆய்வின் போது ரெயில்வே துறை உயர் அதிகாரிகள், பொறியாளர்கள் உடன் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...

0 comments:
Post a Comment