Saturday, August 23, 2014
ஈரோடு ரெயில் நிலையத்தில், நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுபரன்சு தெரிவித்தார்.
கோட்ட மேலாளர் சோதனை
ஈரோடு ரெயில் நிலையம் அருகே ரெயில் என்ஜின் பணிமனைகள் இயங்கி வருகின்றன. எலக்ட்ரிக் லோகோ பணிமனை ஒரு புறமும், டீசல் லோகோ பணிமனை ஒருபுறமும் இயங்கி வருகிறது. இருப்பினும் ஈரோட்டில் இருந்து செல்லும் ரெயில்களில் உள்ள என்ஜின்கள் அடிக்கடி பழுதாகி வருவது தொடர்ந்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஈரோட்டில் இருந்து புறப்பட்டு சென்ற சரக்கு ரெயில்கள் நடுவழியில் என்ஜின் பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பிற பயணிகள் ரெயில்களும் தாமதமாகி சென்றன.
இந்தநிலையில் சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுபரன்சு நேற்று ஈரோடு ரெயில் நிலையத்தில் திடீர் சோதனை நடத்தினார்.
உத்தரவு
ஈரோடு ரெயில் நிலைய சரக்கு ரெயில் நிறுத்தும் பகுதி, ஈரோடு டீசல் என்ஜின் பணிமனைகளில் அவர் திடீர் சோதனை நடத்தி அங்கு பார்வையிட்டார். அப்போது என்ஜின்களை முழுமையாக பராமரித்து எந்த தடங்கலும் இல்லாமல் ரெயில்கள் ஓடச்செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக அவர் உயர் அதிகாரிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தினார். பின்னர் கோட்ட ரெயில்வே மேலாளர் சுபரன்சு நிருபர்களிடம் கூறியதாவது:–
கூடுதல் பணிமனை
ரெயில் பெட்டிகள், சரக்கு ரெயில் பெட்டிகளை பராமரிப்பது. ரெயில் என்ஜின்கள் பராமரிப்பு மற்றும் தண்ணீர் வினியோகம் ஆகியவை தடங்கலின்றி நடப்பது குறித்து ஆய்வு நடந்தது. ஈரோடு டீசல் லோகோ செட்டில் அதிக அளவில் என்ஜின்கள் பழுது பார்க்கப்பட்டு வருகின்றன. எனவே இங்கு கூடுதலாக ஒரு பணிமனை பிரிவு உருவாக்கப்படும். இதற்கான திட்டம் ரெயில்வே துறைக்கு அனுப்பப்பட்டு விரைவில் ஒப்புதல் பெறப்பட உள்ளது.
இதுபோல் ரெயில் நிலையத்துக்கான லிப்ட், நகரும் படிக்கட்டு பணிகளும் விரைவில் தொடங்கும். ரெயில்வே ஆஸ்பத்திரி கட்டிட பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
ரெயில் நிற்குமா?
திருப்பதிக்கு அதிக அளவில் ரெயில்கள் உள்ளன. எனவே கோவை–திருப்பதி ரெயிலை ஈரோடு ரெயில் நிலையத்தில் நிறுத்துவது தொடர்பாக அமைச்சகம்தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுபரன்சு கூறினார். ஆய்வின் போது ரெயில்வே துறை உயர் அதிகாரிகள், பொறியாளர்கள் உடன் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment