Saturday, August 23, 2014
ஈரோடு ரெயில் நிலையத்தில், நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுபரன்சு தெரிவித்தார்.
கோட்ட மேலாளர் சோதனை
ஈரோடு ரெயில் நிலையம் அருகே ரெயில் என்ஜின் பணிமனைகள் இயங்கி வருகின்றன. எலக்ட்ரிக் லோகோ பணிமனை ஒரு புறமும், டீசல் லோகோ பணிமனை ஒருபுறமும் இயங்கி வருகிறது. இருப்பினும் ஈரோட்டில் இருந்து செல்லும் ரெயில்களில் உள்ள என்ஜின்கள் அடிக்கடி பழுதாகி வருவது தொடர்ந்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஈரோட்டில் இருந்து புறப்பட்டு சென்ற சரக்கு ரெயில்கள் நடுவழியில் என்ஜின் பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பிற பயணிகள் ரெயில்களும் தாமதமாகி சென்றன.
இந்தநிலையில் சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுபரன்சு நேற்று ஈரோடு ரெயில் நிலையத்தில் திடீர் சோதனை நடத்தினார்.
உத்தரவு
ஈரோடு ரெயில் நிலைய சரக்கு ரெயில் நிறுத்தும் பகுதி, ஈரோடு டீசல் என்ஜின் பணிமனைகளில் அவர் திடீர் சோதனை நடத்தி அங்கு பார்வையிட்டார். அப்போது என்ஜின்களை முழுமையாக பராமரித்து எந்த தடங்கலும் இல்லாமல் ரெயில்கள் ஓடச்செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக அவர் உயர் அதிகாரிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தினார். பின்னர் கோட்ட ரெயில்வே மேலாளர் சுபரன்சு நிருபர்களிடம் கூறியதாவது:–
கூடுதல் பணிமனை
ரெயில் பெட்டிகள், சரக்கு ரெயில் பெட்டிகளை பராமரிப்பது. ரெயில் என்ஜின்கள் பராமரிப்பு மற்றும் தண்ணீர் வினியோகம் ஆகியவை தடங்கலின்றி நடப்பது குறித்து ஆய்வு நடந்தது. ஈரோடு டீசல் லோகோ செட்டில் அதிக அளவில் என்ஜின்கள் பழுது பார்க்கப்பட்டு வருகின்றன. எனவே இங்கு கூடுதலாக ஒரு பணிமனை பிரிவு உருவாக்கப்படும். இதற்கான திட்டம் ரெயில்வே துறைக்கு அனுப்பப்பட்டு விரைவில் ஒப்புதல் பெறப்பட உள்ளது.
இதுபோல் ரெயில் நிலையத்துக்கான லிப்ட், நகரும் படிக்கட்டு பணிகளும் விரைவில் தொடங்கும். ரெயில்வே ஆஸ்பத்திரி கட்டிட பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
ரெயில் நிற்குமா?
திருப்பதிக்கு அதிக அளவில் ரெயில்கள் உள்ளன. எனவே கோவை–திருப்பதி ரெயிலை ஈரோடு ரெயில் நிலையத்தில் நிறுத்துவது தொடர்பாக அமைச்சகம்தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுபரன்சு கூறினார். ஆய்வின் போது ரெயில்வே துறை உயர் அதிகாரிகள், பொறியாளர்கள் உடன் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...

0 comments:
Post a Comment