Saturday, August 30, 2014
கோவை, :கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ராஜ்குமார் (49) கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உள்ளார். கோவை கணபதி பகுதியில் வசிப்பதால் இவருக்கு கணபதி ராஜ்குமார் என பெயர் வந்தது. கணபதி நல்லதண்ணீர் தோட்டம் பகுதியில் தனது வீட்டருகே குமாரசாமி மெட்ரிக் மேல்நிலை பள்ளி என்ற ஆங்கிலவழி பள்ளியை நடத்தி வருகிறார். இவரது மனைவி தமயந்தி இப்பள்ளியை கவனித்து வருகிறார். எம்.ஏ., எல்.எல்.பி. படித்துள்ளார். தற்போது, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
1995ல் மாணவர் அணி மாவட்ட தலைவராக இருந்தார். பின்னர், தொண்டாமுத்தூர் பகுதி செயலாளர் ஆனார். 2001ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. இத்தேர்தலில் வெற்றிபெற்று கவுன்சிலர் ஆனார். தொடர்ந்து, 2006, 2011 என அடுத்தடுத்து மூன்று முறை ஒரே வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
தற்போது, கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவராக உள்ளார். கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து செ.ம.வேலுசாமி கடந்த ஜூன் மாதம் நீக்கப்பட்ட பிறகு, இவர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போது, முதல்முறையாக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மடத்துக்குளம் பேரூராட்சி கழுகரையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான பொய் வழக்கிலிருந்து விரைவில் மீண்டு வந்து தமிழக ஆட்சிப் பொறுப்...
-
கோவை, :கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ராஜ்குமார் (49) கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உள்ளார்...
-
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மான்பிடிமங்கலம் சக்திவேல் அவர்களின் மனைவி நித்யா(25) மற்றும் அவர்களது 8 மாத கைக்குழந்தை பவ்யஸ...
-
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை தேஜஸ் ரோட்டரி சங்கம் அமைப்பின் சார்பில் 4 துறைகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தத் துறையில் சிறந்த முறையில் ச...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
0 comments:
Post a Comment