Saturday, August 30, 2014
கோவை, :கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ராஜ்குமார் (49) கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உள்ளார். கோவை கணபதி பகுதியில் வசிப்பதால் இவருக்கு கணபதி ராஜ்குமார் என பெயர் வந்தது. கணபதி நல்லதண்ணீர் தோட்டம் பகுதியில் தனது வீட்டருகே குமாரசாமி மெட்ரிக் மேல்நிலை பள்ளி என்ற ஆங்கிலவழி பள்ளியை நடத்தி வருகிறார். இவரது மனைவி தமயந்தி இப்பள்ளியை கவனித்து வருகிறார். எம்.ஏ., எல்.எல்.பி. படித்துள்ளார். தற்போது, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
1995ல் மாணவர் அணி மாவட்ட தலைவராக இருந்தார். பின்னர், தொண்டாமுத்தூர் பகுதி செயலாளர் ஆனார். 2001ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. இத்தேர்தலில் வெற்றிபெற்று கவுன்சிலர் ஆனார். தொடர்ந்து, 2006, 2011 என அடுத்தடுத்து மூன்று முறை ஒரே வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
தற்போது, கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவராக உள்ளார். கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து செ.ம.வேலுசாமி கடந்த ஜூன் மாதம் நீக்கப்பட்ட பிறகு, இவர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போது, முதல்முறையாக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment