Saturday, August 30, 2014
பொள்ளாச்சி, : பொள் ளாச்சி பகுதியில் ஆபாச படங்களை சி.டி. மற்றும் மெமரி கார்டுகளில் பதவிறக்கம் செய்து விற்பனைக்கு வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில செல்போன் கடைகளில், கம்ப்யூட்டரில் இருந்து மெமரிகார்டுகளில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து விற்பனை செய்வதாகவும். சில சிடி கடைகளில் ஆபாச படம் மற் றும் புதுப்பட சிடி விற்பனை செய்வதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மேற்கு ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் ராஜாமில் ரோடு, பெருமாள் செட்டி வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள செல்போன் கடைகள் மற்றும் சி.டி. கடை களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.சோதனையில் ஒரு சில கடைகளில் கம்ப்யூட்டரில் இருந்து செல்போன்களுக் கான மெமரிகார்டுகளில் ஆபாச படங்கள் பதிவிறக்கம் செய்தும், ஆபாச படங்கள் அடங்கிய சி.டி. க்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதில், ராஜாமில்ரோட்டில் உள்ள ஒரு செல்போன் கடையில் மெமரிகார்டில் ஆபாச படம் பதிவிறக்கம் செய்து கொண்டிருந்த நோதாஜி ரோட்டை சேர்ந்த சரவணக்குமார் (29) என்பவரையும், பெருமாள்செட்டி வீதியில் உள்ள செல்போன் கடையில் கம்ப்யூட்டர் மூலம் ஆபாச படம் பதிவிறக்கம் செய்து விற்பனைக்கு வைத்திருந்த இந்திராநகரை சேர்ந்த செந்தில்குமார்(38) என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆபாச படம் பதிவிறக்கம் செய்ய பயன்படுத்திய இரண்டு கம்ப்யூட்டர் மற்றும் மெமரி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் பெருமாள்செட்டி வீதியில் உள்ள இரண்டு சிடி கடைகளில் சோதனை செய்தபோது அங்கு 41 ஆபாசபட சிடிக்கள் மற்றும் சமீபத்தில் வெளி யான ஆஞ்சான், முண்டாசு பட்டி, அரிமாநம்பி, வேலை யில்லா பட்டதாரி உள்பட உரிமம் இல்லாத புதுப்பட சிடிக்கள் 97ஐ பறிமுதல் செய்தனர். ஆபாசபடம் மற்றும் புதுப்பட சிடிக்களை விற்பனைக்கு வைத்திருந்த குமரன்நகரை சேர்ந்த அபுபக்கர்(25) இந்திராநகரை சேர்ந்த ரபீக்(40) ஆகியோரை கைது செய்தனர். கிழக்கு போலீஸ் எல்லைக்குட்பட்ட இமமாம்கான் வீதியில் உள்ள ஒரு சிடிக்கடையில் சோத னை செய்தபோது, ஆபாச சிடி உள்பட மொத்தம் 28 சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை விற்பனை செய்ய வைத்திருந்த மரப்பேட்டையை சேர்ந்த ராமராஜ் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மடத்துக்குளம் பேரூராட்சி கழுகரையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான பொய் வழக்கிலிருந்து விரைவில் மீண்டு வந்து தமிழக ஆட்சிப் பொறுப்...
-
கோவை, :கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ராஜ்குமார் (49) கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உள்ளார்...
-
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மான்பிடிமங்கலம் சக்திவேல் அவர்களின் மனைவி நித்யா(25) மற்றும் அவர்களது 8 மாத கைக்குழந்தை பவ்யஸ...
-
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை தேஜஸ் ரோட்டரி சங்கம் அமைப்பின் சார்பில் 4 துறைகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தத் துறையில் சிறந்த முறையில் ச...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
0 comments:
Post a Comment