Monday, August 25, 2014
தமிழுக்குச் செம்மொழி வாரம்கொண்டாட வேண்டும் என்றுஇந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத் திற்கான பதில் இதுவரை வர வில்லை. இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கருத்துஎன்ன என தமுஎகச கவுரவத் தலைவர் பேரா.அருணன் வினா எழுப்பியுள்ளார்.
மதுரை காளவாசலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாநி லக்குழு சார்பில் தாய்த்தமிழுக்கு நீதி கேட்டு உண்ணாநிலை அறப் போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி பேரா.அருணன் பேசியதாவது: இந்தியாவில் உள்ள 125 கோடி பேரில் 40 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தான் இந்தி பேசுகிறார்கள். மீதமுள்ள 60 சத வீதம் பேர் பிறமொழிகளைப் பேசுபவர்கள். ஆனால், இந்தியா வில் இந்திக்காரர்களுக்கு இந்தி, அல்லாதவர்களுக்கு ஆங்கிலம் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்தி தவிர 21 மொழிகளுக்கான சம அந்தஸ்தை மத்திய ஆட்சி யாளர்கள் தர மறுக்கிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற தேர்வாணை யத் தேர்வினை இந்தியில் தான் நடத்த வேண்டும் என்று இந்தி பேசுவோர் போராட்டம் நடத் தினர்.
திறனறிவுத் தேர்வு என்பது ஆங்கிலத்தில் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு மொழி என்பது அவரவர் திறமைiயை வெளியே கொண்டு வரும் கருவியாகும். ஆனால், அந்நிய மொழியில் தேர்வை எழுதினால் எப்படி பூரண மாக அவர்களது திறமையைக் கொண்டு வர முடியும். ஆனால், மத்திய அரசோ, இந்தி பேசுபவர்களுக்கு இந்தியில் தேர்வு, மற்றவர்களுக்கு ஆங்கிலத் தில் தேர்வு என நிலை எடுத்தது சரியான நிலைபாடு தானா?தமிழகத்தில் உள்ள உயர் நீதிமன்றங்களில் அலுவல் மொழி யாக தமிழைக் கொண்டு வருவதை மத்திய அரசு ஏற்கவில்லை என்றுசொல்லவில்லை. ஆனால், அதற் கான செலவை யார் செய்வது என்றகேள்வியை எழுப்புகிறது.
பெருமுதலாளிகளுக்கு 5 லட்சம் கோடி ரூபாயை வரிச்சலுகை செய் யும் மத்திய அரசுக்கு, தமிழுக்கு நிதி ஒதுக்க மனமில்லையா? மத்திய அரசுப்பள்ளிகளுக்கு சமீபத்தில் மனித வள மேம் பாட்டு துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், இந்திய மொழிகளின் தாய் சமஸ்கிருதம் என்று கூறப் பட்டுள்ளது. இந்தியாவில் பல மொழிக்குடும்பங்கள் உள்ளன. சமஸ்கிருதம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஒடிசா ஆகிய 6 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சமஸ்கிருதத்திற்கு மட்டும் வாரம் கொண்டாடுவது என்ன நியாயம்? சமஸ்கிருத வாரம்கொண்டாட முடியாது. தமி ழுக்குச் செம்மொழி வாரம் அறி விக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
இதற்கு மோடியின் பதில் என்ன? அரசியல் சாசனத்தின் 8 வது அட்டவணையின்படி அனைத்து மொழிகளுக்கும் சமஉரிமை வழங்க வேண்டும். தான்அனுப்பிய கடிதத்திற்கு மத் திய அரசு இதுவரை ஏன் பதி லளிக்கவில்லையென்று முதல்வர் ஜெயலலிதா பதிலளிக்க வேண்டும்.இந்தியை எதிர்க்க ஆங்கிலம் இருக்கட்டும் என அண்ணா முதல் ராஜாஜி வரை ஏற்றுக்கொண்டது வினோத கணக்கு.
அது ஒரு தவறான கணக்கு. இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் மாறாக ஆங் கிலத்திணிப்பு கூடாது என்கிறோம். தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவதற்கு காரணம் உட்கட்டமைப்பு, போதிய ஆசிரியர் இல்லாமை, நவீனப் பாடக்கருவிகள் இல்லாதது தான். ஆனால், அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழியைப் பரவலாக்க தமிழக அரசு எடுக்கும் நட வடிக்கை என்பது தனியார் பள்ளிகளைப் போல, அரசுப்பள்ளி களிலும் தமிழ் வழிக்கல்வி இல் லாத நிலை ஏற்படும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment