Friday, August 29, 2014

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தச்சநல்லூரை சேர்ந்தவர் வருண் தேவன் (வயது 48). இவர் கோவை அருகேயுள்ள பல்லடம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்தார். இவரது வீடு பல்லடம் – மங்களம் ரோட்டில் அம்மாபாளையத்தில் உள்ளது.
அலுவலக வேலையாக பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்த வருண் தேவன் மாலை 4.30 மணியளவில் வீட்டுக்கு தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
அம்மாபாளையம் பிரிவு அருகில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் வருண் தேவனின் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் பலத்த காயமடைந்த வருண் தேவன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் வருண் தேவனை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி ஏட்டு வருண்தேவன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார், பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமண தாஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பல்லடம் போலீசார் ஏட்டு வருண் தேவன் மீது மோதிவிட்டு சென்ற வாகனம் எது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment