Friday, August 29, 2014

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தச்சநல்லூரை சேர்ந்தவர் வருண் தேவன் (வயது 48). இவர் கோவை அருகேயுள்ள பல்லடம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்தார். இவரது வீடு பல்லடம் – மங்களம் ரோட்டில் அம்மாபாளையத்தில் உள்ளது.
அலுவலக வேலையாக பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்த வருண் தேவன் மாலை 4.30 மணியளவில் வீட்டுக்கு தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
அம்மாபாளையம் பிரிவு அருகில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் வருண் தேவனின் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் பலத்த காயமடைந்த வருண் தேவன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் வருண் தேவனை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி ஏட்டு வருண்தேவன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார், பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமண தாஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பல்லடம் போலீசார் ஏட்டு வருண் தேவன் மீது மோதிவிட்டு சென்ற வாகனம் எது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
0 comments:
Post a Comment