Friday, August 29, 2014

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தச்சநல்லூரை சேர்ந்தவர் வருண் தேவன் (வயது 48). இவர் கோவை அருகேயுள்ள பல்லடம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்தார். இவரது வீடு பல்லடம் – மங்களம் ரோட்டில் அம்மாபாளையத்தில் உள்ளது.
அலுவலக வேலையாக பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்த வருண் தேவன் மாலை 4.30 மணியளவில் வீட்டுக்கு தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
அம்மாபாளையம் பிரிவு அருகில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் வருண் தேவனின் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் பலத்த காயமடைந்த வருண் தேவன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் வருண் தேவனை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி ஏட்டு வருண்தேவன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார், பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமண தாஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பல்லடம் போலீசார் ஏட்டு வருண் தேவன் மீது மோதிவிட்டு சென்ற வாகனம் எது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
0 comments:
Post a Comment