Monday, August 25, 2014
தினமும் பெற்றோரை வணங்கிய பின் தனது பணிகளைத் தொடங்குபவர்களுக்கு வாழ்க்கையில் எல்லாப் பெருமைகளும் வந்து சேரும் என, மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரி முதல்வர் எம். ராஜீயகொடி தெரிவித்தார்.
அழகர்கோவில் அருகிலுள்ள லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரியில் 16ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 329 மாணவ- மாணவியர்களுக்குப் பட்டம் வழங்கி அவர் மேலும் பேசியது:
பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் தொழில்முனைவோர்களாக மாணவ, மாணவியர் வரவேண்டும். வேலைத் தேடி அலையும் நபராக இருக்கக் கூடாது. பறவைகள் அதிகாலையிலேயே நீண்ட தொலைவு பறந்து சென்று தங்களுக்குத் தேவையான இரையைப் பெற்று, இருப்பிடம் திரும்புகின்றன. அது போல், சிறந்த மாணவராக உருவாக பறவைகளைப் பார்த்து பழகிக் கொள்ளவேண்டும்.
மாணவர்கள் தினமும் தங்களது பெற்றோரை கடவுளாக நினைத்து வணங்கினால், வாழ்க்கையில் அனைத்து நலன்களையும் பெற்றுத் திகழலாம். அதேபோன்று, நமது தேசத்தையும் மதிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
கல்லூரி நிறுவனத் தலைவர் டத்தோ டாக்டர் கே. மாதவன் தலைமை வகித்தார். லதா மாதவன் பாலிடெக்னிக் முதல்வர் தவமணி வரவேற்றார்.
கல்லூரியின் மின்னணுவியல் துறை மாணவர் எஸ். ஜலால் முதலிடத்தையும், வி. அருண்பாண்டி இரண்டாமிடத்தையும் மற்றும் இயந்திரவியல் துறையில் ஜெ. ஜெகன்நாத் பிரபு மூன்றாமிடத்தையும் பெற்றிருந்தனர். இம்மாணவர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
விழாவில், லதா மாதவன் கல்விக் குழும இயக்குநர் எஸ். சேதுபதி, பொறியியல் கல்லூரி முதல்வர் மாரிமுத்து, மெட்ரிக். பள்ளி முதல்வர் மணி சுரேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
0 comments:
Post a Comment