Wednesday, August 13, 2014

நாட்டின் 68–வது சுதந்திர தினம் வருகிற 15–ந்தேதி கொண்டாடப்படுகிறது. அனைத்து பகுதிகளிலும் சுதந்திர தின கொண்டாடட்டங்கள் வெகுசிறப்பாக நடத்தப்படும். இதையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகிறார்கள்.
மதுரையில் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி முக்கிய இடங்களான மீனாட்சி அம்மன் கோவில், ரெயில் நிலையம், விமான நிலையம் மற்றும் முக்கிய வழிபாட்டு தலங்கள், அரசு அலுவலகங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சோதனை சாவடிகளிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு வாகன சோதனைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
தீவிரவாதிகளால் அடிக்கடி மிரட்டல்கள் வரும் மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் வருகையை வீடியோவில் பதிவு செய்யயப்படுகிறது.
பக்தர்கள் கொண்டுவரும் பொருட்கள், பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
மதுரை ரெயில் நிலையத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். பயணிகள் கொண்டுவரும் உடமைகள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. மேலும் மதுரைக்கு வரும் ரெயில்கள், புறப்படும் ரெயில்களிலும் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ரெயில் மூலம் பார்சல் அனுப்புவதிலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையிலும் நாளை (13–ந் தேதி) முதல் 16–ந்தேதி வரை தடை விதிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும் என்று ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...