Monday, August 25, 2014

மதுரை உயர்மறை மாவட்ட கத்தோலிக்க புதிய பேராயர் பணி ஏற்பு விழா நேற்று தூய பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த விழாவில், 6–வது பேராயராக அந்தோணி பாப்புசாமி பதவி ஏற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சிக்கு போப் ஆண்டவரின் இந்திய தூதர் சால்வத்தோரே பென்னாக்கியா தலைமை தாங்கி புதிய பேராயரிடம் பொறுப்புகளை வழங்கினார். மதுரை மறைமாவட்ட முன்னாள் பேராயர் பீட்டர் பெர்ணான்டோ முன்னிலை வகித்தார். எஸ்.சி., எஸ்.டி., பணிக்குழுவின் செயலர் அருட்தந்தை செபாஸ்டின் வரவேற்றார்.
முதன்மை குழு ஜோசப் செல்வராஜ், துறவிகள் ஜோஸ்பின் நிர்மலாமேரி, பொதுநிலையினர் சார்பில் ஏ.எம்.ஜேம்ஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மதுரை, சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, பாளையங்கோட்டை, கோட்டாறு ஆகிய 7 மறை மாவட்டங்களுக்கு இவர் பேராயராக பதவி வகிப்பார்.
விழாவில் சென்னை மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி உள்பட 20–க்கும் மேற்பட்ட ஆயர்களும், 400–க்கும் மேற்பட்ட குருக்கள், 600–க்கும் மேற்பட்ட இருபால் துறவிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் மதுரை வடக்கு வட்டார அதிபர் அந்தோணி ராஜன் நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளரும் நோபிலி அருட்பணி மைய இயக்குநருமான அருட்தந்தை ஜான்பிரிட்டோ பாக்கியராஜ், மறைமாவட்ட பொருளாளர் ஆரோக்கியம், கல்விப்பணிக்குழு செயலர் எட்வர்டு பிரான்சிஸ் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
0 comments:
Post a Comment