Wednesday, September 03, 2014
உடுமலை உழவர் சந்தையில் ஆகஸ்டு மாதம் ரூ.1½ கோடிக்கு காய்கறிகள் விற்பனையானது.
உடுமலை கபூர்கான் வீதியில் உள்ள உழவர் சந்தையில் கடந்த ஆகஸ்டு மாதம் 5 லட்சத்து 92 ஆயிரத்து 205 கிலோ காய்கறிகள் விற்பனைக்கு வந்திருந்தது. 2, 196 விவசாயிகள் கொண்டு வந்திருந்த இந்த காய்கறிகள் மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்து 31ஆயிரத்து 500–க்கு விற்பனையானது. இந்த காய்கறிகளை 84 ஆயிரத்து 77 நுகர்வோர் (பொது மக்கள்) வாங்கி பயனடைந்தனர்.
கடந்த ஜூலை மாதம் 2,162 விவசாயிகள் கொண்டு வந்திருந்த 5 லட்சத்து 54 ஆயிரத்து 615 கிலோ காய்கறிகள் ரூ.1 கோடியே 60 லட்சத்து 58 ஆயிரத்து 265–க்கு விற்பனையாகியிருந்தது. இதை 79 ஆயிரத்து 302 நுகர்வோர் வாங்கி பயனடைந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட ஜூலை மாதம் காய்கறிகளின் வரத்து குறைவாக இருந்தும் விற்பனை விலை அதிகமாக இருந்தது. ஜூலை மாதத்தை விட ஆகஸ்ட் மாதம் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்திருந்ததால் விற்பனை தொகையும் குறைவானது.
உடுமலை உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.6 முதல் ரூ.8 வரைக்கும், கத்தரிக்காய் ரூ. 16 முதல் ரூ.24 வரைக்கும், வெண்டைக்காய் ரூ.16 முதல் ரூ.20 வரைக்கும், அவரைக்காய் ரூ.30–க்கும், புடலங்காய் ரூ.16–க்கும், பீர்க்கங்காய் ரூ. 12 முதல் 15 வரைக்கும், சுரைக்காய் ரூ. 8 முதல் 10 வரைக்கும், பாகற்காய் ரூ.22 முதல் ரூ.24 வரைக்கும், பூசணிக்காய் ரூ.12–க்கும், சம்பாபச்சை மிளகாய் ரூ. 18 க்கும், குண்டு பச்சை மிளகாய் ரூ.24 முதல் ரூ.26 வரைக்கும் விற்பனையானது.
சின்ன வெங்காயம் ரூ.30 முதல் ரூ.34 வரைக்கும், பெரிய வெங்காயம் ரூ.26 முதல் ரூ.32 வரைக்கும், முருங்கைக்காய் ரூ.16 முதல் ரூ.18 வரைக்கும், உருளைகிழங்கு ரூ.38–க்கும், கேரட் ரூ.48 முதல் ரூ.50 வரைக்கும், பீட்ரூட் ரூ.12 முதல் ரூ.14 வரைக்கும்,முட்டைக்கோஸ் ரூ.16–க்கும், முள்ளங்கி ரூ.10 முதல் ரூ.12வரைக்கும், சாதா பீன்ஸ் ரூ.40–க்கும், புஸ்பீன்ஸ் ரூ. 50க்கும், பழைய இஞ்சி ரூ.100–க்கும், புதிய இஞ்சி ரூ.60–க்கும் விற்பனையானது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...

0 comments:
Post a Comment