Wednesday, September 03, 2014
உடுமலை உழவர் சந்தையில் ஆகஸ்டு மாதம் ரூ.1½ கோடிக்கு காய்கறிகள் விற்பனையானது.
உடுமலை கபூர்கான் வீதியில் உள்ள உழவர் சந்தையில் கடந்த ஆகஸ்டு மாதம் 5 லட்சத்து 92 ஆயிரத்து 205 கிலோ காய்கறிகள் விற்பனைக்கு வந்திருந்தது. 2, 196 விவசாயிகள் கொண்டு வந்திருந்த இந்த காய்கறிகள் மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்து 31ஆயிரத்து 500–க்கு விற்பனையானது. இந்த காய்கறிகளை 84 ஆயிரத்து 77 நுகர்வோர் (பொது மக்கள்) வாங்கி பயனடைந்தனர்.
கடந்த ஜூலை மாதம் 2,162 விவசாயிகள் கொண்டு வந்திருந்த 5 லட்சத்து 54 ஆயிரத்து 615 கிலோ காய்கறிகள் ரூ.1 கோடியே 60 லட்சத்து 58 ஆயிரத்து 265–க்கு விற்பனையாகியிருந்தது. இதை 79 ஆயிரத்து 302 நுகர்வோர் வாங்கி பயனடைந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட ஜூலை மாதம் காய்கறிகளின் வரத்து குறைவாக இருந்தும் விற்பனை விலை அதிகமாக இருந்தது. ஜூலை மாதத்தை விட ஆகஸ்ட் மாதம் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்திருந்ததால் விற்பனை தொகையும் குறைவானது.
உடுமலை உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.6 முதல் ரூ.8 வரைக்கும், கத்தரிக்காய் ரூ. 16 முதல் ரூ.24 வரைக்கும், வெண்டைக்காய் ரூ.16 முதல் ரூ.20 வரைக்கும், அவரைக்காய் ரூ.30–க்கும், புடலங்காய் ரூ.16–க்கும், பீர்க்கங்காய் ரூ. 12 முதல் 15 வரைக்கும், சுரைக்காய் ரூ. 8 முதல் 10 வரைக்கும், பாகற்காய் ரூ.22 முதல் ரூ.24 வரைக்கும், பூசணிக்காய் ரூ.12–க்கும், சம்பாபச்சை மிளகாய் ரூ. 18 க்கும், குண்டு பச்சை மிளகாய் ரூ.24 முதல் ரூ.26 வரைக்கும் விற்பனையானது.
சின்ன வெங்காயம் ரூ.30 முதல் ரூ.34 வரைக்கும், பெரிய வெங்காயம் ரூ.26 முதல் ரூ.32 வரைக்கும், முருங்கைக்காய் ரூ.16 முதல் ரூ.18 வரைக்கும், உருளைகிழங்கு ரூ.38–க்கும், கேரட் ரூ.48 முதல் ரூ.50 வரைக்கும், பீட்ரூட் ரூ.12 முதல் ரூ.14 வரைக்கும்,முட்டைக்கோஸ் ரூ.16–க்கும், முள்ளங்கி ரூ.10 முதல் ரூ.12வரைக்கும், சாதா பீன்ஸ் ரூ.40–க்கும், புஸ்பீன்ஸ் ரூ. 50க்கும், பழைய இஞ்சி ரூ.100–க்கும், புதிய இஞ்சி ரூ.60–க்கும் விற்பனையானது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment