Wednesday, September 03, 2014
உடுமலை உழவர் சந்தையில் ஆகஸ்டு மாதம் ரூ.1½ கோடிக்கு காய்கறிகள் விற்பனையானது.
உடுமலை கபூர்கான் வீதியில் உள்ள உழவர் சந்தையில் கடந்த ஆகஸ்டு மாதம் 5 லட்சத்து 92 ஆயிரத்து 205 கிலோ காய்கறிகள் விற்பனைக்கு வந்திருந்தது. 2, 196 விவசாயிகள் கொண்டு வந்திருந்த இந்த காய்கறிகள் மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்து 31ஆயிரத்து 500–க்கு விற்பனையானது. இந்த காய்கறிகளை 84 ஆயிரத்து 77 நுகர்வோர் (பொது மக்கள்) வாங்கி பயனடைந்தனர்.
கடந்த ஜூலை மாதம் 2,162 விவசாயிகள் கொண்டு வந்திருந்த 5 லட்சத்து 54 ஆயிரத்து 615 கிலோ காய்கறிகள் ரூ.1 கோடியே 60 லட்சத்து 58 ஆயிரத்து 265–க்கு விற்பனையாகியிருந்தது. இதை 79 ஆயிரத்து 302 நுகர்வோர் வாங்கி பயனடைந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட ஜூலை மாதம் காய்கறிகளின் வரத்து குறைவாக இருந்தும் விற்பனை விலை அதிகமாக இருந்தது. ஜூலை மாதத்தை விட ஆகஸ்ட் மாதம் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்திருந்ததால் விற்பனை தொகையும் குறைவானது.
உடுமலை உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.6 முதல் ரூ.8 வரைக்கும், கத்தரிக்காய் ரூ. 16 முதல் ரூ.24 வரைக்கும், வெண்டைக்காய் ரூ.16 முதல் ரூ.20 வரைக்கும், அவரைக்காய் ரூ.30–க்கும், புடலங்காய் ரூ.16–க்கும், பீர்க்கங்காய் ரூ. 12 முதல் 15 வரைக்கும், சுரைக்காய் ரூ. 8 முதல் 10 வரைக்கும், பாகற்காய் ரூ.22 முதல் ரூ.24 வரைக்கும், பூசணிக்காய் ரூ.12–க்கும், சம்பாபச்சை மிளகாய் ரூ. 18 க்கும், குண்டு பச்சை மிளகாய் ரூ.24 முதல் ரூ.26 வரைக்கும் விற்பனையானது.
சின்ன வெங்காயம் ரூ.30 முதல் ரூ.34 வரைக்கும், பெரிய வெங்காயம் ரூ.26 முதல் ரூ.32 வரைக்கும், முருங்கைக்காய் ரூ.16 முதல் ரூ.18 வரைக்கும், உருளைகிழங்கு ரூ.38–க்கும், கேரட் ரூ.48 முதல் ரூ.50 வரைக்கும், பீட்ரூட் ரூ.12 முதல் ரூ.14 வரைக்கும்,முட்டைக்கோஸ் ரூ.16–க்கும், முள்ளங்கி ரூ.10 முதல் ரூ.12வரைக்கும், சாதா பீன்ஸ் ரூ.40–க்கும், புஸ்பீன்ஸ் ரூ. 50க்கும், பழைய இஞ்சி ரூ.100–க்கும், புதிய இஞ்சி ரூ.60–க்கும் விற்பனையானது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment