Tuesday, September 02, 2014

On Tuesday, September 02, 2014 by farook press in ,    
லாங்கொடை பகுதிக்கு மிக அண்மையில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் அண்னன் தம்பிக்கு இடையில் இடம்பெற்ற செருப்பு சண்டை கத்திகுத்தில் போய் முடிந்துள்ளது.
இன்று காலை பலாங்கொடை பிரதேசத்தின் அண்மித்த கிராமம் ஒன்றில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 வயது அண்ணனின் செருப்பை 11 வயது தம்பி மறைத்து வைத்ததாக கூறி தொடங்கிய சண்டை கத்தி குத்தில் போய் முடிந்துள்ளது.குறித்த சம்பவத்தில் கத்தி குத்துக்கு இலக்கான 11 வயது சிறுவனின் வயிற்றுப்பகுதியில் கத்தி சிக்கிக்கொண்டதால் அறுவை சிகிற்சை மூலம் கத்தி நீக்கப்பட்டுள்ளது.
குறித்த பதினைந்து வயது சிறுவனை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் வரும் 28 ம் திகதி வரை சிறுவர் சீர்திருந்த பள்ளியில் வைக்க பலங்கொட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

0 comments: