Thursday, September 18, 2014
ஈரோட்டில் வியாபாரியை மிரட்டி ரூ.1¼ லட்சம் பறித்த போலி நிருபரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பர்னஸ் ஆயில் மோசடி
கோவை மற்றும் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாக பர்னஸ் ஆயில் பெங்களூரில் இருந்து டேங்கர் லாரிகளில் ஈரோடு மாவட்டம் நசியனூர் வழியாக கொண்டு செல்லப்படுகிறது இந்த ஆயிலை டிரைவர்கள் சிலர் தங்கள் லாரிகளில் இருந்து திருடி குறைந்த விலைக்கு நசியனூர் மற்றும் பல பகுதிகளில் விற்பதாக கூறப்படுகிறது. லாரியில் இருந்து எடுக்கப்பட்ட பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக அதே அளவில் ஏதாவது பழைய ஆயிலை லாரியில் ஏற்கனவே உள்ள பர்னஸ் ஆயிலுடன் டிரைவர்கள் கலந்து விடுவார்கள்.
இந்த பர்னஸ் ஆயிலை பெறும் தொழிற்சாலை நிறுவனங்கள் அவ்வளவு எளிதில் இதை கண்டுபிடிக்க முடியாது. இதுபோன்ற மோசடி கடந்த பல மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.
பழைய இரும்பு வியாபாரி
ஈரோடு அருகே உள்ள நசியனூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 46). பழைய இரும்பு வியாபாரி. அந்த பகுதியில் கடை வைத்து உள்ளார்.
இந்தநிலையில் கோவையை சேர்ந்த ஜெகதீசன் என்ற டிரைவர் பெங்களூரில் இருந்து லாரியில் பர்னஸ் ஆயிலுடன் நேற்று முன்தினம் நசியனூர் வந்தார். பின்னர் ராமசாமியின் கடை முன்பு லாரியை நிறுத்தினார். பின்னர் அவர்கள் 2 பேரும் கடை முன்பு பேசிக்கொண்டிருந்தனர்.
மிரட்டல்
அப்போது 4 பேர் 2 மோட்டார்சைக்கிளில் ராமசாமியின் கடை முன்பு வந்து நின்றனர். பின்னர் அவர்கள், ‘தாங்கள் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு மாத இதழ் பத்திரிகையில் வேலை செய்கிறோம். சென்னையை சேர்ந்த வேலு பிரபாகரன் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர். கோபால் திருச்செங்கோடு தாலுகா போட்டோ கிராபர். சிவக்குமார் (42) ஈரோடு தாலுகா நிருபர் மற்றும் போட்டோ கிராபர். பிரகாஷ் பத்திரிகையின் ஈரோடு பகுதி முகவர்‘ என்று ஒவ்வொருவராக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து ராமசாமியை பார்த்து ‘நீங்கள் பெங்களூரில் இருந்து வரும் லாரிகளில் பர்னஸ் ஆயிலை திருடி விற்பனை செய்து வருகிறீர்கள். இது சட்டப்படி குற்றம். நீங்கள் பர்னஸ் ஆயில் திருடுவது போன்ற படம் எடுத்து உள்ளோம். எனவே இந்த செய்தியை எங்கள் பத்திரிகையில் படத்துடன் வெளியிட்டுவிடுவோம். அப்படி செய்தி வெளிவந்தால் உங்கள் மானம், மரியாதை ஆகியவை போய்விடும். மேலும் போலீஸ், வழக்கு என்று அலையவேண்டி வரும்‘ என்றும் மிரட்டினர்.
ரூ.1¼ லட்சம் பறிப்பு
அவர்களின் மிரட்டலை கண்டு பயந்த ராமசாமி நான் லாரியில் இருந்து பர்னஸ் ஆயிலை திருடும் எந்த தவறுகளையும் செய்யவில்லை என்று கூறிப்பார்த்தார். ஆனால் அவர்கள் ராமசாமியை தொடர்ந்து மிரட்டினர். அதுமட்டுமின்றி இந்த செய்தி எங்கள் பத்திரிகையில் வராமல் இருக்க வேண்டும் என்றால் எங்களுக்கு ஆள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் கூறினர்.
அவர்களின் மிரட்டலில் பயந்து போன ராமசாமி தனக்கு தெரிந்தவர்களிடம் இருந்து ரூ.1¼ லட்சத்தை வாங்கி அந்த 4 பேரிடம் கொடுத்தார்.
லாரி உரிமையாளரிடம்...
இந்த பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் சட்டென்று அங்கு நின்று கொண்டிருந்த லாரியில் ஏறி பர்னஸ் ஆயில் கொண்டு வருவதற்கான அனுமதி கடிதம் மற்றும் லாரியின் உரிமையாளரான கோவையை சேர்ந்த செந்தில் என்பவரின் செல்போன் எண்ணையும் எடுத்தனர்.
நீங்கள் (ராமசாமி) பணம் தராவிட்டால் என்ன. நீங்கள் கொடுக்க வேண்டிய மீதி பணத்தை லாரி உரிமையாளரிடம் (அதாவது செந்திலிடம்) நாங்கள் வாங்கி விடுவோம் என்றனர். அப்படியும் லாரி உரிமையாளர் கொடுக்காவிட்டால் இந்த செய்தியை பத்திரிகையில் வெளியிடுவோம். இதனால் அவருடைய பர்னஸ் ஆயில் ஒப்பந்தம் ரத்தாவதுடன், லாரியையே பறிமுதல் செய்யும் சூழ்நிலை ஏற்படும் என்றும் கூறிவிட்டு அவர்கள் அனைவரும் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
போலீசில் புகார்
இதுகுறித்து ராமசாமி சித்தோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து அந்த 4 பேரையும் தேடி வந்தார்.
இந்தநிலையில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் நிருபரும், போட்டோ கிராபருமான சிவக்குமார் நிற்பதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலி நிருபர் கைது
தகவல் அறிந்ததும் போலீசார் வீரப்பன்சத்திரம் விரைந்து சென்று அங்கு மாரியம்மன் கோவில் அருகில் நின்று கொண்டிருந்த சிவக்குமாரை நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.30 ஆயிரம், மோட்டார்சைக்கிள், பத்திரிகை அடையாள அட்டை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக வேலு பிரபாகரன், கோபால், பிரகாஷ் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலி நிருபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் ஒரு போலி நிருபர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பர்னஸ் ஆயில் மோசடி
கோவை மற்றும் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாக பர்னஸ் ஆயில் பெங்களூரில் இருந்து டேங்கர் லாரிகளில் ஈரோடு மாவட்டம் நசியனூர் வழியாக கொண்டு செல்லப்படுகிறது இந்த ஆயிலை டிரைவர்கள் சிலர் தங்கள் லாரிகளில் இருந்து திருடி குறைந்த விலைக்கு நசியனூர் மற்றும் பல பகுதிகளில் விற்பதாக கூறப்படுகிறது. லாரியில் இருந்து எடுக்கப்பட்ட பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக அதே அளவில் ஏதாவது பழைய ஆயிலை லாரியில் ஏற்கனவே உள்ள பர்னஸ் ஆயிலுடன் டிரைவர்கள் கலந்து விடுவார்கள்.
இந்த பர்னஸ் ஆயிலை பெறும் தொழிற்சாலை நிறுவனங்கள் அவ்வளவு எளிதில் இதை கண்டுபிடிக்க முடியாது. இதுபோன்ற மோசடி கடந்த பல மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.
பழைய இரும்பு வியாபாரி
ஈரோடு அருகே உள்ள நசியனூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 46). பழைய இரும்பு வியாபாரி. அந்த பகுதியில் கடை வைத்து உள்ளார்.
இந்தநிலையில் கோவையை சேர்ந்த ஜெகதீசன் என்ற டிரைவர் பெங்களூரில் இருந்து லாரியில் பர்னஸ் ஆயிலுடன் நேற்று முன்தினம் நசியனூர் வந்தார். பின்னர் ராமசாமியின் கடை முன்பு லாரியை நிறுத்தினார். பின்னர் அவர்கள் 2 பேரும் கடை முன்பு பேசிக்கொண்டிருந்தனர்.
மிரட்டல்
அப்போது 4 பேர் 2 மோட்டார்சைக்கிளில் ராமசாமியின் கடை முன்பு வந்து நின்றனர். பின்னர் அவர்கள், ‘தாங்கள் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு மாத இதழ் பத்திரிகையில் வேலை செய்கிறோம். சென்னையை சேர்ந்த வேலு பிரபாகரன் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர். கோபால் திருச்செங்கோடு தாலுகா போட்டோ கிராபர். சிவக்குமார் (42) ஈரோடு தாலுகா நிருபர் மற்றும் போட்டோ கிராபர். பிரகாஷ் பத்திரிகையின் ஈரோடு பகுதி முகவர்‘ என்று ஒவ்வொருவராக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து ராமசாமியை பார்த்து ‘நீங்கள் பெங்களூரில் இருந்து வரும் லாரிகளில் பர்னஸ் ஆயிலை திருடி விற்பனை செய்து வருகிறீர்கள். இது சட்டப்படி குற்றம். நீங்கள் பர்னஸ் ஆயில் திருடுவது போன்ற படம் எடுத்து உள்ளோம். எனவே இந்த செய்தியை எங்கள் பத்திரிகையில் படத்துடன் வெளியிட்டுவிடுவோம். அப்படி செய்தி வெளிவந்தால் உங்கள் மானம், மரியாதை ஆகியவை போய்விடும். மேலும் போலீஸ், வழக்கு என்று அலையவேண்டி வரும்‘ என்றும் மிரட்டினர்.
ரூ.1¼ லட்சம் பறிப்பு
அவர்களின் மிரட்டலை கண்டு பயந்த ராமசாமி நான் லாரியில் இருந்து பர்னஸ் ஆயிலை திருடும் எந்த தவறுகளையும் செய்யவில்லை என்று கூறிப்பார்த்தார். ஆனால் அவர்கள் ராமசாமியை தொடர்ந்து மிரட்டினர். அதுமட்டுமின்றி இந்த செய்தி எங்கள் பத்திரிகையில் வராமல் இருக்க வேண்டும் என்றால் எங்களுக்கு ஆள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் கூறினர்.
அவர்களின் மிரட்டலில் பயந்து போன ராமசாமி தனக்கு தெரிந்தவர்களிடம் இருந்து ரூ.1¼ லட்சத்தை வாங்கி அந்த 4 பேரிடம் கொடுத்தார்.
லாரி உரிமையாளரிடம்...
இந்த பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் சட்டென்று அங்கு நின்று கொண்டிருந்த லாரியில் ஏறி பர்னஸ் ஆயில் கொண்டு வருவதற்கான அனுமதி கடிதம் மற்றும் லாரியின் உரிமையாளரான கோவையை சேர்ந்த செந்தில் என்பவரின் செல்போன் எண்ணையும் எடுத்தனர்.
நீங்கள் (ராமசாமி) பணம் தராவிட்டால் என்ன. நீங்கள் கொடுக்க வேண்டிய மீதி பணத்தை லாரி உரிமையாளரிடம் (அதாவது செந்திலிடம்) நாங்கள் வாங்கி விடுவோம் என்றனர். அப்படியும் லாரி உரிமையாளர் கொடுக்காவிட்டால் இந்த செய்தியை பத்திரிகையில் வெளியிடுவோம். இதனால் அவருடைய பர்னஸ் ஆயில் ஒப்பந்தம் ரத்தாவதுடன், லாரியையே பறிமுதல் செய்யும் சூழ்நிலை ஏற்படும் என்றும் கூறிவிட்டு அவர்கள் அனைவரும் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
போலீசில் புகார்
இதுகுறித்து ராமசாமி சித்தோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து அந்த 4 பேரையும் தேடி வந்தார்.
இந்தநிலையில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் நிருபரும், போட்டோ கிராபருமான சிவக்குமார் நிற்பதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலி நிருபர் கைது
தகவல் அறிந்ததும் போலீசார் வீரப்பன்சத்திரம் விரைந்து சென்று அங்கு மாரியம்மன் கோவில் அருகில் நின்று கொண்டிருந்த சிவக்குமாரை நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.30 ஆயிரம், மோட்டார்சைக்கிள், பத்திரிகை அடையாள அட்டை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக வேலு பிரபாகரன், கோபால், பிரகாஷ் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலி நிருபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் ஒரு போலி நிருபர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment