Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
பெரியார் பிறந்தநாளையொட்டி நேற்று அவரது சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க.

பகுத்தறிவு கொள்கைகளை பரப்பிய ஈ.வெ.ரா.பெரியாரின் பிறந்தநாள் விழா நேற்று தமிழகம் எங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது உருவச்சிலைகளுக்கும், படங்களுக்கும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நாகர்கோவிலில் பெரியார் சிலை ஒழுகினசேரி சந்திப்பில் உள்ளது.

இந்த சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

நிர்வாகிகள்

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பச்சைமால், நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் சதாசிவம், பொருளாளர் வக்கீல் ஞானசேகர், ஜஸ்டின்செல்வராஜ், துணைச்செயலாளர் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகிருஷ்ணன், என்ஜினீயர் லட்சுமணன், சிவசெல்வராஜன், அணி செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன், டி.மனோகரன், டாரதி சாம்சன், முட்டம் லாரன்ஸ், சேவியர்மனோகரன், வக்கீல் பாலஜனாதிபதி, நகர செயலாளர் சந்திரன், கிருஷ்ணகுமார், கே.சி.யு.மணி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சாரதாமணி, தலைமைக்கழக பேச்சாளர் நீலகண்டன், வக்கீல் சுந்தரம், இரணியல் லட்சுமணன், கோட்டார் கிருஷ்ணன், கே.பி.எஸ்.பிரான்சிஸ், வி.கே.மகாதேவன், பொன்.சுந்தர்நாத், பூங்காகண்ணன், திருமலைஅறிவழகன், வேலாயுதம், இ.என்.சங்கர், லதாராமச்சந்திரன், ஆக்கோ ஆறுமுகம், கவுன்சிலர்கள் ஸ்ரீமணிகண்டன், ஜே.ஜே.சந்திரன், விக்ரமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க.-தி.க.

தி.மு.க. சார்பில் தோவாளை ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற மாலை அணிவிப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் முருகபதி தலைமை தாங்கினார். செயலாளர் தமிழரசன், துணைச்செயலாளர் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் தயாளன், தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கரநாராயணன், மகளிரணி மண்டல அமைப்பாளர் மணிமேகலை மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

0 comments: