Thursday, September 18, 2014
திருவனந்தபுரத்திற்கு வந்த விமானத்தில் பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கன்னியாகுமரியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
தவறாக நடக்க முயற்சி
தோகாவில் இருந்து கத்தார் ஏர்வேஸ் விமானம் திருவனந்தபுரம் நோக்கி நேற்று காலையில் வந்து கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த சில்வா மைக்கிள்(வயது 40) என்பவர் பயணம் செய்தார். இந்த நிலையில் அந்த ஆசாமி விமான பயணத்தின் போது பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதோடு, ஆபாச வார்த்தைகளை கூறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விமானம் வந்து இறங்கியதும், அந்த பணிப்பெண் நிலைய அதிகாரிகளிடம் புகார் செய்தார். விமான பணிப்பெண்ணின் புகாரை தொடர்ந்து சில்வா மைக்கிளிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நீதிமன்றத்தில் ஆஜர்
அதனைத் தொடர்ந்து சில்வா மைக்கிளை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி: ஒப்பந்த பணிகளுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரி திருச்சியில் ரயில்வே ஒப்பந்ததாரர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ப...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
0 comments:
Post a Comment