Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
திருவனந்தபுரத்திற்கு வந்த விமானத்தில் பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கன்னியாகுமரியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
தவறாக நடக்க முயற்சி
தோகாவில் இருந்து கத்தார் ஏர்வேஸ் விமானம் திருவனந்தபுரம் நோக்கி நேற்று காலையில் வந்து கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த சில்வா மைக்கிள்(வயது 40) என்பவர் பயணம் செய்தார். இந்த நிலையில் அந்த ஆசாமி விமான பயணத்தின் போது பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதோடு, ஆபாச வார்த்தைகளை கூறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விமானம் வந்து இறங்கியதும், அந்த பணிப்பெண் நிலைய அதிகாரிகளிடம் புகார் செய்தார். விமான பணிப்பெண்ணின் புகாரை தொடர்ந்து சில்வா மைக்கிளிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நீதிமன்றத்தில் ஆஜர்
அதனைத் தொடர்ந்து சில்வா மைக்கிளை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

0 comments: