Thursday, September 18, 2014
On Thursday, September 18, 2014 by farook press in kanniyakumari
திருவட்டார் அருகே மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.
தெருவிளக்கு எரியவில்லை
திருவட்டாரை அடுத்துள்ள வேர்கிளம்பி பேரூராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 18-வது வார்டுகளில் கல்லறவிளை, செக்காளவிளை, கொட்டாரவிளை, கொச்சன்குளம் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள தெரு விளக்குகள் சுமார் 3 மாதங்களாக எரியவில்லை என்று அந்த பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர். மேலும், தெருவிளக்குகளை உடனே சரிசெய்யக்கோரி பேரூராட்சி நிர்வாகம், கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும், புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
நூதன போராட்டம்
இந்த நிலையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.நேற்று முன்தினம் இரவு தெருவில் திரண்ட அந்த பகுதி மக்கள் அங்குள்ள மின் கம்பங்களில் தீப்பந்தங்களை ஏற்றி வைத்தனர். மேலும், தங்கள் கைகளில் தீப்பந்தம் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி கோரிக்கையை வற்புறுத்தி கோஷம் எழுப்பினர்.
இது பற்றி அந்த பகுதி மக்கள் கூறும்போது,“ தெரு விளக்குகள் எரியாததால் இரவில் பெண்கள் நடமாட அஞ்சும் நிலை உள்ளது. மேலும், நகை பறிப்பு உள்பட குற்றச்செயல்களும் நடைபெறுவதால் உடனடியாக தெருவிளக்குகளை எரியவைக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்டமாக போராட்டங்கள் நடத்தப்படும்“ என்று தெரிவித்தனர்.
தெருவிளக்கு எரியவில்லை
திருவட்டாரை அடுத்துள்ள வேர்கிளம்பி பேரூராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 18-வது வார்டுகளில் கல்லறவிளை, செக்காளவிளை, கொட்டாரவிளை, கொச்சன்குளம் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள தெரு விளக்குகள் சுமார் 3 மாதங்களாக எரியவில்லை என்று அந்த பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர். மேலும், தெருவிளக்குகளை உடனே சரிசெய்யக்கோரி பேரூராட்சி நிர்வாகம், கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும், புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
நூதன போராட்டம்
இந்த நிலையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.நேற்று முன்தினம் இரவு தெருவில் திரண்ட அந்த பகுதி மக்கள் அங்குள்ள மின் கம்பங்களில் தீப்பந்தங்களை ஏற்றி வைத்தனர். மேலும், தங்கள் கைகளில் தீப்பந்தம் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி கோரிக்கையை வற்புறுத்தி கோஷம் எழுப்பினர்.
இது பற்றி அந்த பகுதி மக்கள் கூறும்போது,“ தெரு விளக்குகள் எரியாததால் இரவில் பெண்கள் நடமாட அஞ்சும் நிலை உள்ளது. மேலும், நகை பறிப்பு உள்பட குற்றச்செயல்களும் நடைபெறுவதால் உடனடியாக தெருவிளக்குகளை எரியவைக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்டமாக போராட்டங்கள் நடத்தப்படும்“ என்று தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...

0 comments:
Post a Comment