Thursday, September 18, 2014
உள்ளாட்சி இடைத்தேர்தல் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. குமரி மாவட்டத்தில் ஓட்டு போட வேண்டிய வாக்காளர்கள் எந்த எந்த இடங்களில் வாக்களிக்க வேண்டும் என்பது பற்றிய விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
குமரி மாவட்டத்தில் 33 உள்ளாட்சி பதவிகளுக்கு 107 பேர் போட்டியிடுகிறார்கள். இந்த இடைத்தேர்தல் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்பு வார்டுகள் மற்றும் ஓட்டு போடவேண்டிய இடங்கள் வருமாறு:–
நகரசபை
நாகர்கோவில் நகரசபை 37–வது வார்டு–பறக்கை ரோடு சந்திப்பில் உள்ள அரசு தொடக்கப்பளி, பத்மநாபபுரம் 11–வது வார்டு–தக்கலை அரசுமேல்நிலைப்பள்ளி, குழித்துறை 10–வது வார்டு–விளவங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி, 20–வது வார்டு–மார்த்தாண்டம் மாதவவிலாசம் நடுநிலைப்பள்ளி.
பேரூராட்சி
திற்பரப்பு 4–வது வார்டு–சேக்கல் புனித பீட்டர் ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி, ஏழுதேசம் 11–வது வார்டு–ஏழுதேசப்பற்று அரசு மேல்நிலைப்பள்ளி, ஆற்றூர் 1–வது வார்டு–தோட்டவாரம் அரசு நடுநிலைப்பள்ளி, கொட்டாரம் 4–வது வார்டு–பெருமாள்புரம் யூனியன் அலுவலகம், கணபதிபுரம் 1–வது வார்டு–சூரப்பள்ளம் அரசு தொடக்கப்பள்ளி, கொல்லங்கோடு 8–வது வார்டு–கொல்லங்கோடு ஸ்ரீதேவி மகளிர் மேல்நிலைப்பள்ளி, பாகோடு 12–வது வார்டு–பேரை அரசு நடுநிலைப்பள்ளி, திங்கள்நகர் 11–வது வார்டு–மாங்குழி புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி, பளுகல் 5–வது வார்டு–பளுகல் அரசு மேல்நிலைப்பள்ளி, இரணியல் 13–வது வார்டு–இரணியல் அரசு நடுநிலைப்பள்ளி, ரீத்தாபுரம் 2–வது வார்டு–சரல்விளை அரசு நடுநிலைப்பள்ளி.
ஊராட்சி ஒன்றியம்–மாவட்ட பஞ்சாயத்து
மேல்புறம் ஊராட்சி ஒன்றிய 5–வது வார்டு மற்றும் மாவட்ட பஞ்சாயத்து 1–வது வார்டு (மேல்புறம்) வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டிய இடங்கள்:
மஞ்சாலுமூடு ஊராட்சிக்கு உட்பட்ட முக்கூட்டுக்கல் திருக்குடும்ப தொடக்கப்பள்ளி, மஞ்சாலுமூடு அரசு தொடக்கப்பள்ளி, முழுக்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பந்தல்விளை காமராஜர் நினைவு உயர்நிலைப்பள்ளி.
ஊராட்சி வார்டுகள்
தேரேகால்புதூர் 9–வது வார்டு–கோதைகிராமம் அரசு தொடக்கப்பள்ளி, தோவாளை 4–வது வார்டு–தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளி, தர்மபுரம் 6–வது வார்டு–காற்றாடித்தட்டு அரசு நடுநிலைப்பள்ளி, வெள்ளிச்சந்தை 4–வது வார்டு–சரல் புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி, 10–வது வார்டு–வெள்ளிச்சந்தை அரசு உயர்நிலைப்பள்ளி, குருந்தன்கோடு 4–வது வார்டு–கொடுப்பைக்குழி அரசு தொடக்கப்பள்ளி, ஆத்திவிளை 4–வது வார்டு–ஆலங்கோடு அரசு நடுநிலைப்பள்ளி, பேச்சிப்பாறை 2–வது வார்டு–குற்றியார் அரசு ரப்பர்கழக நடுநிலைப்பள்ளி, செறுகோல் 3–வது வார்டு–செறுகோல் அரசு தொடக்கப்பள்ளி, மத்திக்கோடு 10–வது வார்டு–மாத்திரவிளை புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி.
மிடாலம் 5–வது வார்டு–உதயமார்த்தாண்டம் அரசு உயர்நிலைப்பள்ளி, நட்டாலம் 6–வது வார்டு–வாழைத்தோட்டம் அரசு தொடக்கப்பள்ளி, விளாத்துறை 15–வது வார்டு–தும்பாலி தூய இருதய அன்னை தொடக்கப்பள்ளி, குளப்புறம் 1–வது வார்டு–பிராகோடு கிறிஸ்து அரசர் உயர்நிலைப்பள்ளி, மெதுகும்மல் 9–வது வார்டு–வாறுதட்டு எம்.எம்.கே.எம்.உயர்நிலைப்பள்ளி, மலையடி 7–வது வார்டு–மேல்பாலை அரசு தொடக்கப்பள்ளி.
காலை 7 மணிமுதல்...
மேற்கண்ட வாக்குச்சாவடிகளில் நகரசபை மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், பிற வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுச்சீட்டுகளும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன. ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடக்கிறது.
இதை முன்னிட்டு அந்த பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. பாதுகாப்பு மற்றும் ரோந்துப்பணியில் மொத்தம் 700 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...

0 comments:
Post a Comment