Thursday, September 18, 2014
உள்ளாட்சி இடைத்தேர்தல் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. குமரி மாவட்டத்தில் ஓட்டு போட வேண்டிய வாக்காளர்கள் எந்த எந்த இடங்களில் வாக்களிக்க வேண்டும் என்பது பற்றிய விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
குமரி மாவட்டத்தில் 33 உள்ளாட்சி பதவிகளுக்கு 107 பேர் போட்டியிடுகிறார்கள். இந்த இடைத்தேர்தல் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்பு வார்டுகள் மற்றும் ஓட்டு போடவேண்டிய இடங்கள் வருமாறு:–
நகரசபை
நாகர்கோவில் நகரசபை 37–வது வார்டு–பறக்கை ரோடு சந்திப்பில் உள்ள அரசு தொடக்கப்பளி, பத்மநாபபுரம் 11–வது வார்டு–தக்கலை அரசுமேல்நிலைப்பள்ளி, குழித்துறை 10–வது வார்டு–விளவங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி, 20–வது வார்டு–மார்த்தாண்டம் மாதவவிலாசம் நடுநிலைப்பள்ளி.
பேரூராட்சி
திற்பரப்பு 4–வது வார்டு–சேக்கல் புனித பீட்டர் ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி, ஏழுதேசம் 11–வது வார்டு–ஏழுதேசப்பற்று அரசு மேல்நிலைப்பள்ளி, ஆற்றூர் 1–வது வார்டு–தோட்டவாரம் அரசு நடுநிலைப்பள்ளி, கொட்டாரம் 4–வது வார்டு–பெருமாள்புரம் யூனியன் அலுவலகம், கணபதிபுரம் 1–வது வார்டு–சூரப்பள்ளம் அரசு தொடக்கப்பள்ளி, கொல்லங்கோடு 8–வது வார்டு–கொல்லங்கோடு ஸ்ரீதேவி மகளிர் மேல்நிலைப்பள்ளி, பாகோடு 12–வது வார்டு–பேரை அரசு நடுநிலைப்பள்ளி, திங்கள்நகர் 11–வது வார்டு–மாங்குழி புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி, பளுகல் 5–வது வார்டு–பளுகல் அரசு மேல்நிலைப்பள்ளி, இரணியல் 13–வது வார்டு–இரணியல் அரசு நடுநிலைப்பள்ளி, ரீத்தாபுரம் 2–வது வார்டு–சரல்விளை அரசு நடுநிலைப்பள்ளி.
ஊராட்சி ஒன்றியம்–மாவட்ட பஞ்சாயத்து
மேல்புறம் ஊராட்சி ஒன்றிய 5–வது வார்டு மற்றும் மாவட்ட பஞ்சாயத்து 1–வது வார்டு (மேல்புறம்) வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டிய இடங்கள்:
மஞ்சாலுமூடு ஊராட்சிக்கு உட்பட்ட முக்கூட்டுக்கல் திருக்குடும்ப தொடக்கப்பள்ளி, மஞ்சாலுமூடு அரசு தொடக்கப்பள்ளி, முழுக்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பந்தல்விளை காமராஜர் நினைவு உயர்நிலைப்பள்ளி.
ஊராட்சி வார்டுகள்
தேரேகால்புதூர் 9–வது வார்டு–கோதைகிராமம் அரசு தொடக்கப்பள்ளி, தோவாளை 4–வது வார்டு–தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளி, தர்மபுரம் 6–வது வார்டு–காற்றாடித்தட்டு அரசு நடுநிலைப்பள்ளி, வெள்ளிச்சந்தை 4–வது வார்டு–சரல் புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி, 10–வது வார்டு–வெள்ளிச்சந்தை அரசு உயர்நிலைப்பள்ளி, குருந்தன்கோடு 4–வது வார்டு–கொடுப்பைக்குழி அரசு தொடக்கப்பள்ளி, ஆத்திவிளை 4–வது வார்டு–ஆலங்கோடு அரசு நடுநிலைப்பள்ளி, பேச்சிப்பாறை 2–வது வார்டு–குற்றியார் அரசு ரப்பர்கழக நடுநிலைப்பள்ளி, செறுகோல் 3–வது வார்டு–செறுகோல் அரசு தொடக்கப்பள்ளி, மத்திக்கோடு 10–வது வார்டு–மாத்திரவிளை புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி.
மிடாலம் 5–வது வார்டு–உதயமார்த்தாண்டம் அரசு உயர்நிலைப்பள்ளி, நட்டாலம் 6–வது வார்டு–வாழைத்தோட்டம் அரசு தொடக்கப்பள்ளி, விளாத்துறை 15–வது வார்டு–தும்பாலி தூய இருதய அன்னை தொடக்கப்பள்ளி, குளப்புறம் 1–வது வார்டு–பிராகோடு கிறிஸ்து அரசர் உயர்நிலைப்பள்ளி, மெதுகும்மல் 9–வது வார்டு–வாறுதட்டு எம்.எம்.கே.எம்.உயர்நிலைப்பள்ளி, மலையடி 7–வது வார்டு–மேல்பாலை அரசு தொடக்கப்பள்ளி.
காலை 7 மணிமுதல்...
மேற்கண்ட வாக்குச்சாவடிகளில் நகரசபை மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், பிற வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுச்சீட்டுகளும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன. ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடக்கிறது.
இதை முன்னிட்டு அந்த பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. பாதுகாப்பு மற்றும் ரோந்துப்பணியில் மொத்தம் 700 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment