Thursday, September 18, 2014
பி.எஸ்.என்.எல். புதிய சிம்கார்டு வாங்கினால் உடனடியாக பேசும் வசதியை சென்னை டெலிபோன்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளது.
புதிய வசதி
பி.எஸ்.என்.எல். சென்னை டெலிபோன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ஏ.பாலசுப்பிரமணியன் நேற்று பி.எஸ்.என்.எல். புதிய சிம் கார்டு வாங்கினால் அதை உடனடியாக செயல்படுத்தும் வசதியை நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
சென்னை நகரில் மட்டும் 14 லட்சத்து 90 ஆயிரம் பேர் பி.எஸ்.என்.எல். சிம்கார்டு பயன்படுத்துகிறார்கள். 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் பி.எஸ்.என்.எல். இணைய தளவசதி பெற்றுள்ளனர். 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் பி.எஸ்.என்.எல்.லேண்ட் லைன் போன் வைத்துள்ளனர்.
பி.எஸ்.என்.எல். சிம்கார்டை ஏராளமான வாடிக்கையாளர்கள் வாங்கி பயன்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் சிம் கார்டு வாங்கினால் உடடினயாக அந்த சிம்கார்டு செயல்பட (ஆக்டிவேசன்) தொடங்கும் வசதியை சென்னை டெலிபோன்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளது.
முதலில் www.cymn.bsnl.co.in என்ற இணையதளத்திற்கு சென்று உங்களுக்கு தேவையான புதிய எண் கொண்ட பி.எஸ்.என்.எல் சிம்கார்டை தேர்ந்து எடுங்கள்.
சேவை மையம்
பின்னர் அதே ஆன்லைனில் உங்கள் முகவரி, அடையாள அட்டை போன்ற விவரங்களை விண்ணப்பத்தில் தெரிவியுங்கள். இவ்வாறு அதில் உங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்துவிட்டு அது கொடுக்கும் எண்ணை கொண்டு அருகில் உள்ள தொலைபேசி சேவை மையத்திற்கு செல்லுங்கள். சென்னையில் 50 சேவை மையங்கள் உள்ளன.
சேவை மையத்திற்கு சென்று, நீங்கள் ஆன்லைனில் சிம்கார்டை தேர்ந்து எடுத்ததற்கான பதிவு எண்ணை தெரிவியுங்கள். மேலும் சேவை மையத்தில் நீங்கள் இணைய தளத்தில் விண்ணப்பித்த அனைத்து அசல் சான்றிதழ்களையும் காண்பிக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் அனைத்து ஆவணங்களும் உண்மை என்ற பட்சத்தில் உடனடியாக உங்கள் சிம் கார்டு செயல்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின்போது முதன்மை பொதுமேலாளர்கள் கே.கே.வேலு, என்.பூங்குழலி, பொது மேலாளர் பி.ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
100 வருடம் தொலைபேசி
பின்னர் சென்னையில் 100 வருடமாக தொலைபேசி வைத்து பயன்படுத்தி வரும் ரமேஷ் சி.குமார் என்பவருக்கு பி.எஸ்.என்.எல். சென்னை டெலிபோன்ஸ் சார்பில் தலைமை பொது மேலாளர் ஏ.பாலசுப்பிரமணியன் வாழ்த்து தெரிவித்து பரிசளித்து கவுரவப்படுத்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment