Thursday, September 18, 2014
பி.எஸ்.என்.எல். புதிய சிம்கார்டு வாங்கினால் உடனடியாக பேசும் வசதியை சென்னை டெலிபோன்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளது.
புதிய வசதி
பி.எஸ்.என்.எல். சென்னை டெலிபோன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ஏ.பாலசுப்பிரமணியன் நேற்று பி.எஸ்.என்.எல். புதிய சிம் கார்டு வாங்கினால் அதை உடனடியாக செயல்படுத்தும் வசதியை நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
சென்னை நகரில் மட்டும் 14 லட்சத்து 90 ஆயிரம் பேர் பி.எஸ்.என்.எல். சிம்கார்டு பயன்படுத்துகிறார்கள். 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் பி.எஸ்.என்.எல். இணைய தளவசதி பெற்றுள்ளனர். 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் பி.எஸ்.என்.எல்.லேண்ட் லைன் போன் வைத்துள்ளனர்.
பி.எஸ்.என்.எல். சிம்கார்டை ஏராளமான வாடிக்கையாளர்கள் வாங்கி பயன்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் சிம் கார்டு வாங்கினால் உடடினயாக அந்த சிம்கார்டு செயல்பட (ஆக்டிவேசன்) தொடங்கும் வசதியை சென்னை டெலிபோன்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளது.
முதலில் www.cymn.bsnl.co.in என்ற இணையதளத்திற்கு சென்று உங்களுக்கு தேவையான புதிய எண் கொண்ட பி.எஸ்.என்.எல் சிம்கார்டை தேர்ந்து எடுங்கள்.
சேவை மையம்
பின்னர் அதே ஆன்லைனில் உங்கள் முகவரி, அடையாள அட்டை போன்ற விவரங்களை விண்ணப்பத்தில் தெரிவியுங்கள். இவ்வாறு அதில் உங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்துவிட்டு அது கொடுக்கும் எண்ணை கொண்டு அருகில் உள்ள தொலைபேசி சேவை மையத்திற்கு செல்லுங்கள். சென்னையில் 50 சேவை மையங்கள் உள்ளன.
சேவை மையத்திற்கு சென்று, நீங்கள் ஆன்லைனில் சிம்கார்டை தேர்ந்து எடுத்ததற்கான பதிவு எண்ணை தெரிவியுங்கள். மேலும் சேவை மையத்தில் நீங்கள் இணைய தளத்தில் விண்ணப்பித்த அனைத்து அசல் சான்றிதழ்களையும் காண்பிக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் அனைத்து ஆவணங்களும் உண்மை என்ற பட்சத்தில் உடனடியாக உங்கள் சிம் கார்டு செயல்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின்போது முதன்மை பொதுமேலாளர்கள் கே.கே.வேலு, என்.பூங்குழலி, பொது மேலாளர் பி.ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
100 வருடம் தொலைபேசி
பின்னர் சென்னையில் 100 வருடமாக தொலைபேசி வைத்து பயன்படுத்தி வரும் ரமேஷ் சி.குமார் என்பவருக்கு பி.எஸ்.என்.எல். சென்னை டெலிபோன்ஸ் சார்பில் தலைமை பொது மேலாளர் ஏ.பாலசுப்பிரமணியன் வாழ்த்து தெரிவித்து பரிசளித்து கவுரவப்படுத்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment