Thursday, September 18, 2014
பல்லாவரம் அருகே கவுல்பஜாரில் பட்டப்பகலில் பூட்டிய வீட்டில் கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 58 பவுன் நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை மீட்டனர்.
நகை கொள்ளை
சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள கவுல்பஜார், கலைஞர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் லியோ ராஜராஜன்(வயது 36). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவியும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 58 பவுன் நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து சங்கர் நகர் போலீஸ் நிலையத்தில் லியோ ராஜராஜன் புகார் செய்தார். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கொள்ளையர்களை விரைந்து பிடிக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.
3 பேர் கைது
இதையடுத்து தென்சென்னை இணை கமிஷனர் திருஞானம், பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன் மேற்பார்வையில் பல்லாவரம் உதவி கமிஷனர் கவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் ஆலந்தூர் வ.உ.சி. நகரைச் சேர்ந்த நாகராஜ்(30), வில்லிவாக்கம் தெற்கு ஜெகநாதன் தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்ற அடையார் கார்த்திக்(25) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் காஞ்சீபுரம் தெற்குபட்டு திருவிடந்தை பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆனந்த்பாபு(30)என்பவரையும் கைது செய்தனர். கைதான 3 பேரிடம் இருந்தும் கொள்ளையடிக்கப்பட்ட 58 பவுன் நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை மீட்டனர்.
உரிமையாளரிடம் ஒப்படைப்பு
கொள்ளையர்கள் 3 பேரும், திருட்டு வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில்தான் சிறையில் இருந்து வெளியில் வந்தது விசாரணையில் தெரியவந்தது.
கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை அதன் உரிமையாளரான லியோ ராஜராஜனிடம் தென்சென்னை இணை கமிஷனர் திருஞானம் ஒப்படைத்தார்.
புகார் கொடுத்த 12 மணி நேரத்தில் கொள்ளையர்களை திறமையாக பிடித்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்ட தனிப்படை போலீசாரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பாராட்டினார்.
நகை கொள்ளை
சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள கவுல்பஜார், கலைஞர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் லியோ ராஜராஜன்(வயது 36). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவியும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 58 பவுன் நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து சங்கர் நகர் போலீஸ் நிலையத்தில் லியோ ராஜராஜன் புகார் செய்தார். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கொள்ளையர்களை விரைந்து பிடிக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.
3 பேர் கைது
இதையடுத்து தென்சென்னை இணை கமிஷனர் திருஞானம், பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன் மேற்பார்வையில் பல்லாவரம் உதவி கமிஷனர் கவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் ஆலந்தூர் வ.உ.சி. நகரைச் சேர்ந்த நாகராஜ்(30), வில்லிவாக்கம் தெற்கு ஜெகநாதன் தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்ற அடையார் கார்த்திக்(25) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் காஞ்சீபுரம் தெற்குபட்டு திருவிடந்தை பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆனந்த்பாபு(30)என்பவரையும் கைது செய்தனர். கைதான 3 பேரிடம் இருந்தும் கொள்ளையடிக்கப்பட்ட 58 பவுன் நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை மீட்டனர்.
உரிமையாளரிடம் ஒப்படைப்பு
கொள்ளையர்கள் 3 பேரும், திருட்டு வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில்தான் சிறையில் இருந்து வெளியில் வந்தது விசாரணையில் தெரியவந்தது.
கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை அதன் உரிமையாளரான லியோ ராஜராஜனிடம் தென்சென்னை இணை கமிஷனர் திருஞானம் ஒப்படைத்தார்.
புகார் கொடுத்த 12 மணி நேரத்தில் கொள்ளையர்களை திறமையாக பிடித்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்ட தனிப்படை போலீசாரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பாராட்டினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment