Thursday, September 18, 2014
பல்லாவரம் அருகே கவுல்பஜாரில் பட்டப்பகலில் பூட்டிய வீட்டில் கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 58 பவுன் நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை மீட்டனர்.
நகை கொள்ளை
சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள கவுல்பஜார், கலைஞர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் லியோ ராஜராஜன்(வயது 36). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவியும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 58 பவுன் நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து சங்கர் நகர் போலீஸ் நிலையத்தில் லியோ ராஜராஜன் புகார் செய்தார். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கொள்ளையர்களை விரைந்து பிடிக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.
3 பேர் கைது
இதையடுத்து தென்சென்னை இணை கமிஷனர் திருஞானம், பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன் மேற்பார்வையில் பல்லாவரம் உதவி கமிஷனர் கவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் ஆலந்தூர் வ.உ.சி. நகரைச் சேர்ந்த நாகராஜ்(30), வில்லிவாக்கம் தெற்கு ஜெகநாதன் தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்ற அடையார் கார்த்திக்(25) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் காஞ்சீபுரம் தெற்குபட்டு திருவிடந்தை பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆனந்த்பாபு(30)என்பவரையும் கைது செய்தனர். கைதான 3 பேரிடம் இருந்தும் கொள்ளையடிக்கப்பட்ட 58 பவுன் நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை மீட்டனர்.
உரிமையாளரிடம் ஒப்படைப்பு
கொள்ளையர்கள் 3 பேரும், திருட்டு வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில்தான் சிறையில் இருந்து வெளியில் வந்தது விசாரணையில் தெரியவந்தது.
கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை அதன் உரிமையாளரான லியோ ராஜராஜனிடம் தென்சென்னை இணை கமிஷனர் திருஞானம் ஒப்படைத்தார்.
புகார் கொடுத்த 12 மணி நேரத்தில் கொள்ளையர்களை திறமையாக பிடித்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்ட தனிப்படை போலீசாரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பாராட்டினார்.
நகை கொள்ளை
சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள கவுல்பஜார், கலைஞர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் லியோ ராஜராஜன்(வயது 36). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவியும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 58 பவுன் நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து சங்கர் நகர் போலீஸ் நிலையத்தில் லியோ ராஜராஜன் புகார் செய்தார். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கொள்ளையர்களை விரைந்து பிடிக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.
3 பேர் கைது
இதையடுத்து தென்சென்னை இணை கமிஷனர் திருஞானம், பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன் மேற்பார்வையில் பல்லாவரம் உதவி கமிஷனர் கவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் ஆலந்தூர் வ.உ.சி. நகரைச் சேர்ந்த நாகராஜ்(30), வில்லிவாக்கம் தெற்கு ஜெகநாதன் தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்ற அடையார் கார்த்திக்(25) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் காஞ்சீபுரம் தெற்குபட்டு திருவிடந்தை பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆனந்த்பாபு(30)என்பவரையும் கைது செய்தனர். கைதான 3 பேரிடம் இருந்தும் கொள்ளையடிக்கப்பட்ட 58 பவுன் நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை மீட்டனர்.
உரிமையாளரிடம் ஒப்படைப்பு
கொள்ளையர்கள் 3 பேரும், திருட்டு வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில்தான் சிறையில் இருந்து வெளியில் வந்தது விசாரணையில் தெரியவந்தது.
கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை அதன் உரிமையாளரான லியோ ராஜராஜனிடம் தென்சென்னை இணை கமிஷனர் திருஞானம் ஒப்படைத்தார்.
புகார் கொடுத்த 12 மணி நேரத்தில் கொள்ளையர்களை திறமையாக பிடித்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்ட தனிப்படை போலீசாரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பாராட்டினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...

0 comments:
Post a Comment