Thursday, September 18, 2014
பல்லாவரம் அருகே கவுல்பஜாரில் பட்டப்பகலில் பூட்டிய வீட்டில் கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 58 பவுன் நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை மீட்டனர்.
நகை கொள்ளை
சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள கவுல்பஜார், கலைஞர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் லியோ ராஜராஜன்(வயது 36). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவியும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 58 பவுன் நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து சங்கர் நகர் போலீஸ் நிலையத்தில் லியோ ராஜராஜன் புகார் செய்தார். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கொள்ளையர்களை விரைந்து பிடிக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.
3 பேர் கைது
இதையடுத்து தென்சென்னை இணை கமிஷனர் திருஞானம், பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன் மேற்பார்வையில் பல்லாவரம் உதவி கமிஷனர் கவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் ஆலந்தூர் வ.உ.சி. நகரைச் சேர்ந்த நாகராஜ்(30), வில்லிவாக்கம் தெற்கு ஜெகநாதன் தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்ற அடையார் கார்த்திக்(25) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் காஞ்சீபுரம் தெற்குபட்டு திருவிடந்தை பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆனந்த்பாபு(30)என்பவரையும் கைது செய்தனர். கைதான 3 பேரிடம் இருந்தும் கொள்ளையடிக்கப்பட்ட 58 பவுன் நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை மீட்டனர்.
உரிமையாளரிடம் ஒப்படைப்பு
கொள்ளையர்கள் 3 பேரும், திருட்டு வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில்தான் சிறையில் இருந்து வெளியில் வந்தது விசாரணையில் தெரியவந்தது.
கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை அதன் உரிமையாளரான லியோ ராஜராஜனிடம் தென்சென்னை இணை கமிஷனர் திருஞானம் ஒப்படைத்தார்.
புகார் கொடுத்த 12 மணி நேரத்தில் கொள்ளையர்களை திறமையாக பிடித்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்ட தனிப்படை போலீசாரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பாராட்டினார்.
நகை கொள்ளை
சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள கவுல்பஜார், கலைஞர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் லியோ ராஜராஜன்(வயது 36). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவியும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 58 பவுன் நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து சங்கர் நகர் போலீஸ் நிலையத்தில் லியோ ராஜராஜன் புகார் செய்தார். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கொள்ளையர்களை விரைந்து பிடிக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.
3 பேர் கைது
இதையடுத்து தென்சென்னை இணை கமிஷனர் திருஞானம், பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன் மேற்பார்வையில் பல்லாவரம் உதவி கமிஷனர் கவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் ஆலந்தூர் வ.உ.சி. நகரைச் சேர்ந்த நாகராஜ்(30), வில்லிவாக்கம் தெற்கு ஜெகநாதன் தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்ற அடையார் கார்த்திக்(25) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் காஞ்சீபுரம் தெற்குபட்டு திருவிடந்தை பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆனந்த்பாபு(30)என்பவரையும் கைது செய்தனர். கைதான 3 பேரிடம் இருந்தும் கொள்ளையடிக்கப்பட்ட 58 பவுன் நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை மீட்டனர்.
உரிமையாளரிடம் ஒப்படைப்பு
கொள்ளையர்கள் 3 பேரும், திருட்டு வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில்தான் சிறையில் இருந்து வெளியில் வந்தது விசாரணையில் தெரியவந்தது.
கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை அதன் உரிமையாளரான லியோ ராஜராஜனிடம் தென்சென்னை இணை கமிஷனர் திருஞானம் ஒப்படைத்தார்.
புகார் கொடுத்த 12 மணி நேரத்தில் கொள்ளையர்களை திறமையாக பிடித்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்ட தனிப்படை போலீசாரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பாராட்டினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...

0 comments:
Post a Comment