Wednesday, September 03, 2014
திருப்பூர் அருகே பஸ்–வேன் மோதிய விபத்தில் டிரைவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். பஸ்சில் வந்த 6 பெண்கள் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 50 பேர் நேற்று காலை பஸ்சில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுவிட்டு பின்னர் பல்லடம் திரும்பிக் கொண்டு இருந்தனர். மங்கலத்தை அடுத்த ஆட்டையாம்பாளையம் பிரிவு அருகே இரவு 10 மணி அளவில் பஸ் வந்தபோது எதிரே சென்ற சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் சரக்கு வேன் டிரைவரான தர்மபுரியை சேர்ந்த பிரபு(வயது 30) இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். பஸ் டிரைவரான கவுந்தபாடியைச் சேர்ந்த தவசி(32) உடல் நசுங்கி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தவசி பரிதாபமாக இறந்தார்.
மேலும் பஸ்சில் பயணம் செய்த பனியன் நிறுவன ஊழியர்களான சரத், சிவா, பாண்டுரங்கன், கார்த்திக், தங்கவேலு, ரேணுகா, செல்வி, சுமித்தா, அனிதா மற்றும் பஸ்சின் மற்றொரு டிரைவர் ஆகிய 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் காயம் அடைந்த பனியன் தொழிலாளர்களான ரமேஷ், விஜயலட்சுமி, நித்யா ஆகியோர் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்தில் சிக்கியவர்களை பல்லடம் தீயணைப்பு வீரர்கள், மங்கலம் போலீசார் போராடி மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பல்லடம்–மங்கலம் ரோட்டில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment