Thursday, September 11, 2014
பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிப்பதுப் பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
நாட்டில் புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டத் திட்டங்களை
இயற்றுவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதில்
மத்திய அரசின் முன்னாள் முதன்மை செயலர், ரமேஷ் சந்திரா தலைமையில்
அமைக்கப்பட்ட குழு, சமீபத்தில் தன் அறிக்கையை, மத்திய அரசிடம்
அளித்துள்ளது. அதில், பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
அதில் சிகரெட்களை பாக்கெட்டில் பிரித்து விற்க தடை செய்ய வேண்டும். வயது வரம்பை 18 லிருந்து 25 ஆக அதிகரிக்க வேண்டும்.
பொது இடங்களில் புகைப்பிடிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதோடு அதை
மீறுவோருக்கு 20,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க பட வேண்டும். பொது
இடங்களில் புகைபிடிப்பவர்களை பிடிக்கும் அதிகாரத்தை, மேலும் பலருக்கு
விரிவாக்க வேண்டும்.
அட்டைகளில் புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து இடம்பெற்றுள்ள
படங்கள் 40 சதவீத இடத்தை பிடித்துள்ளன. அவற்றை 80 சதவீதமாக அதிகரிக்க
வேண்டும். மேலும், அத்தகைய விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு
விதிக்கப்படும் அபராதம் 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...
0 comments:
Post a Comment