Thursday, September 11, 2014
பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிப்பதுப் பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
நாட்டில் புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டத் திட்டங்களை
இயற்றுவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதில்
மத்திய அரசின் முன்னாள் முதன்மை செயலர், ரமேஷ் சந்திரா தலைமையில்
அமைக்கப்பட்ட குழு, சமீபத்தில் தன் அறிக்கையை, மத்திய அரசிடம்
அளித்துள்ளது. அதில், பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
அதில் சிகரெட்களை பாக்கெட்டில் பிரித்து விற்க தடை செய்ய வேண்டும். வயது வரம்பை 18 லிருந்து 25 ஆக அதிகரிக்க வேண்டும்.
பொது இடங்களில் புகைப்பிடிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதோடு அதை
மீறுவோருக்கு 20,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க பட வேண்டும். பொது
இடங்களில் புகைபிடிப்பவர்களை பிடிக்கும் அதிகாரத்தை, மேலும் பலருக்கு
விரிவாக்க வேண்டும்.
அட்டைகளில் புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து இடம்பெற்றுள்ள
படங்கள் 40 சதவீத இடத்தை பிடித்துள்ளன. அவற்றை 80 சதவீதமாக அதிகரிக்க
வேண்டும். மேலும், அத்தகைய விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு
விதிக்கப்படும் அபராதம் 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment