Tuesday, September 16, 2014
சேரம்பாடி பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக 2 கும்கி யானைகள் மூலம் தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
காட்டு யானைகள் அட்டகாசம்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்-1 பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதியில் யானைகள்,சிறுத்தை புலிகள் உட்பட பல விலங்குகள் உள்ளன.
இதில் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளை தாக்குவதுடன் தொழிலாளர்களையும் தாக்கி வருகின்றன. இதை தடுக்க அந்த பகுதியில் அகழி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் தோட்ட பகுதியில் அகழி அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக காட்டு யானைகள் கூட்டம் ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 22 யானைகள் ஊருக்குள் புகுந்தது. இதில் சில யானைகள் தேயிலை தோட்ட பகுதிகளிலும், சில யானைகள் படச்சேரி பகுதிளிலும் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன. இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
2 கும்கிகள் வரவழைப்பு
தகவல் அறிந்ததும் காட்டு யானைகளை கும்கி யானைகள் மூலம் விரட்ட முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கூடலூர் கோட்ட வன அலுவலர் தேஜ்ஸ்வீ உத்தரவின் பேரில் முதுமலையில் இருந்து சங்கர்,வசீம் ஆகிய கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. பின்னர் கும்கிகள் மூலம் காட்டு யானைகளை தேடும் பணி நடந்தது.
இதை தொடர்ந்து தேயிலை தோட்டப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர். இந்த பணியில் சேரம்பாடி ரேஞ்சர் கணேசன், பிதிர்காடு ரேஞ்சர் சோமசுந்தரம் மற்றும் வனத்துறையினரும், வேட்டை தடுப்பு காவலர்களும் ஈடுபட்டனர். தொடர்ந்து ஊருக்குள் முகாமிட்டு உள்ள காட்டு யானைகளை தேடி விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
காட்டு யானைகள் அட்டகாசம்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்-1 பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதியில் யானைகள்,சிறுத்தை புலிகள் உட்பட பல விலங்குகள் உள்ளன.
இதில் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளை தாக்குவதுடன் தொழிலாளர்களையும் தாக்கி வருகின்றன. இதை தடுக்க அந்த பகுதியில் அகழி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் தோட்ட பகுதியில் அகழி அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக காட்டு யானைகள் கூட்டம் ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 22 யானைகள் ஊருக்குள் புகுந்தது. இதில் சில யானைகள் தேயிலை தோட்ட பகுதிகளிலும், சில யானைகள் படச்சேரி பகுதிளிலும் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன. இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
2 கும்கிகள் வரவழைப்பு
தகவல் அறிந்ததும் காட்டு யானைகளை கும்கி யானைகள் மூலம் விரட்ட முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கூடலூர் கோட்ட வன அலுவலர் தேஜ்ஸ்வீ உத்தரவின் பேரில் முதுமலையில் இருந்து சங்கர்,வசீம் ஆகிய கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. பின்னர் கும்கிகள் மூலம் காட்டு யானைகளை தேடும் பணி நடந்தது.
இதை தொடர்ந்து தேயிலை தோட்டப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர். இந்த பணியில் சேரம்பாடி ரேஞ்சர் கணேசன், பிதிர்காடு ரேஞ்சர் சோமசுந்தரம் மற்றும் வனத்துறையினரும், வேட்டை தடுப்பு காவலர்களும் ஈடுபட்டனர். தொடர்ந்து ஊருக்குள் முகாமிட்டு உள்ள காட்டு யானைகளை தேடி விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...

0 comments:
Post a Comment