Tuesday, September 30, 2014
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,க.சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கர்நாடகா தனி நீதிமனறத்தில் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டதை கண்டித்து, 2 வது இன்று காலை 8.00 மணி முதல், மாலை 5 மணி வரை திருப்பூர் புதிய பேருந்து நிலையம் டெலிபோன் அலுவலகம் எதிரில் துணை மேயர் சு.குணசேகரன் தலைமையில் 2ஆயிரத்திற்கும் மே ற்பட்டோர் கருப்பு சட்டை அணிந்து அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டம் இருந்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் வடக்கு தொகுதி செயலாளர் ஜான், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலளார் ராதாகிருஷ்ணன், எம்..ஜி.ஆர்., மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன், மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து துணை மேயர் சு.குணசேகரன் கூறியதாவது:-
ஒரு சாதாரண குடிமகன்கள் கூட இந்த தீர்ப்பு என்பது மனித உரிமை மீறல் செயல் என கூறுகின்றனர் சாதாரண கைதியை கூட உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படகூடாது என்று உள்ளது. ஏன் என்றால் அவருக்கு மேல் முறையீடு செய்ய கால அவகாசம் கொடுக்க வேண்டும். ஆனால் தமிழக மக்களால் அதிக அளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அடையும் வகையில் நல்ல பல திட்டங்களை மக்களுக்கு அளித்து இந்தியாவிற்கே முன் உதாரணமாகவும், தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாகவும் உருவாக்க அல்லும் பகலும் அயராது பாடுபடும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மேல் முறையீடு செய்யகூட வாய்ப்பு அளிக்காத வகையில் அவரை சிறையில் அடைத்து பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் சனிக்கிழமை அன்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. எத்தனை சக்திகள் வந்தாலும் அவரை அசைக்க முடியாது.அவர் விடுதலை ஆகும் வரை அறப்போராட்டம் தொடரும்.
இவ்வாறு துணை மேயர் சு.குணசேகரன் கூறினார்.
இந்த உண்ணாவிரதத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஒன்றிய குழுத்தலைவர் சாமிநாதன், மாணவரணி மாரிமுத்து, பாசறை நிர்வாகிகள் யுவராஜ் சரவணன், வி.எம்.கோகுல், நெசவாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர்கள் ஜெகநாதன், சுந்தரமூர்த்தி,வழக் கறிஞர் பிரிவு நிர்வாகிகள் வெள்ளியங்கிரி, தங்கவேல், மாமன்ற உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், முருகசாமி,விஜயகுமார், பட்டுலிங்கம், பூலுவபட்டி பாலு, அமுதா வேலுமணி, பி.பாலன், திலகர் நகர் சுப்பு, செந்தில் குமார், சத்தியா, ஈஸ்வரன், சின்னசாமி, சேகர், கிளை கழக செயலாளர்கள் விவேகானந்தன், ராஜேந்திரன், மற்றும் நிர்வாகிகள் பி.எஸ்.டி.செல்வம், சிவகுமார், காலனி செல்வம், மணிகண்டன், சின்னு, கந்தசாமி, பி,பார்த்திபன், மயில்ராஜ், நீதிராஜன், பங்க் என்.ரமேஷ், மகளிர் அணி நிர்வாகிகள் அன்னபூரணி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சாதிக் பாஷா, ராமநாதன், வாசுதேவன், வினோத்குமார், முபாரக், ஆகியோர் உள்பட 2ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள கலந்து கொண்டனர்.
பழி வாங்காதே, பழி வாங்காதே அம்மாவை பழி வாங்காதே,
ஓய்வு இல்லை, உறக்கம் இல்லை, அம்மா வரும் வரை உறக்கம் இல்லை,
ஜாமீன் கொடு, ஜாமீன் கொடு, அம்மாவிற்கு ஜாமீன் கொடு,
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் மனித மீறலை கண்டிக்கிறோம்.
மீண்டும் அம்மா முதல்வராக வருவார்
விழித்திடு, விழித்திடு தமிழனமே விழித்திடு,
என்பது போன்ற கோஷங்கள் உண்ணாவிரதத்தில் படிக்கப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment