Tuesday, September 30, 2014
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,க.சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கர்நாடகா தனி நீதிமனறத்தில் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டதை கண்டித்து, 2 வது இன்று காலை 8.00 மணி முதல், மாலை 5 மணி வரை திருப்பூர் புதிய பேருந்து நிலையம் டெலிபோன் அலுவலகம் எதிரில் துணை மேயர் சு.குணசேகரன் தலைமையில் 2ஆயிரத்திற்கும் மே ற்பட்டோர் கருப்பு சட்டை அணிந்து அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டம் இருந்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் வடக்கு தொகுதி செயலாளர் ஜான், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலளார் ராதாகிருஷ்ணன், எம்..ஜி.ஆர்., மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன், மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து துணை மேயர் சு.குணசேகரன் கூறியதாவது:-
ஒரு சாதாரண குடிமகன்கள் கூட இந்த தீர்ப்பு என்பது மனித உரிமை மீறல் செயல் என கூறுகின்றனர் சாதாரண கைதியை கூட உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படகூடாது என்று உள்ளது. ஏன் என்றால் அவருக்கு மேல் முறையீடு செய்ய கால அவகாசம் கொடுக்க வேண்டும். ஆனால் தமிழக மக்களால் அதிக அளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அடையும் வகையில் நல்ல பல திட்டங்களை மக்களுக்கு அளித்து இந்தியாவிற்கே முன் உதாரணமாகவும், தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாகவும் உருவாக்க அல்லும் பகலும் அயராது பாடுபடும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மேல் முறையீடு செய்யகூட வாய்ப்பு அளிக்காத வகையில் அவரை சிறையில் அடைத்து பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் சனிக்கிழமை அன்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. எத்தனை சக்திகள் வந்தாலும் அவரை அசைக்க முடியாது.அவர் விடுதலை ஆகும் வரை அறப்போராட்டம் தொடரும்.
இவ்வாறு துணை மேயர் சு.குணசேகரன் கூறினார்.
இந்த உண்ணாவிரதத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஒன்றிய குழுத்தலைவர் சாமிநாதன், மாணவரணி மாரிமுத்து, பாசறை நிர்வாகிகள் யுவராஜ் சரவணன், வி.எம்.கோகுல், நெசவாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர்கள் ஜெகநாதன், சுந்தரமூர்த்தி,வழக் கறிஞர் பிரிவு நிர்வாகிகள் வெள்ளியங்கிரி, தங்கவேல், மாமன்ற உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், முருகசாமி,விஜயகுமார், பட்டுலிங்கம், பூலுவபட்டி பாலு, அமுதா வேலுமணி, பி.பாலன், திலகர் நகர் சுப்பு, செந்தில் குமார், சத்தியா, ஈஸ்வரன், சின்னசாமி, சேகர், கிளை கழக செயலாளர்கள் விவேகானந்தன், ராஜேந்திரன், மற்றும் நிர்வாகிகள் பி.எஸ்.டி.செல்வம், சிவகுமார், காலனி செல்வம், மணிகண்டன், சின்னு, கந்தசாமி, பி,பார்த்திபன், மயில்ராஜ், நீதிராஜன், பங்க் என்.ரமேஷ், மகளிர் அணி நிர்வாகிகள் அன்னபூரணி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சாதிக் பாஷா, ராமநாதன், வாசுதேவன், வினோத்குமார், முபாரக், ஆகியோர் உள்பட 2ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள கலந்து கொண்டனர்.
பழி வாங்காதே, பழி வாங்காதே அம்மாவை பழி வாங்காதே,
ஓய்வு இல்லை, உறக்கம் இல்லை, அம்மா வரும் வரை உறக்கம் இல்லை,
ஜாமீன் கொடு, ஜாமீன் கொடு, அம்மாவிற்கு ஜாமீன் கொடு,
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் மனித மீறலை கண்டிக்கிறோம்.
மீண்டும் அம்மா முதல்வராக வருவார்
விழித்திடு, விழித்திடு தமிழனமே விழித்திடு,
என்பது போன்ற கோஷங்கள் உண்ணாவிரதத்தில் படிக்கப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment