Tuesday, September 30, 2014
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் இந்தாண்டு இயல்பை விட, 90 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூரின் ஆண்டு சராசரி மழையளவு 602.45 மி.மீ., 2012ல், 365.29 மி.மீ., 2013ல், 263.88 மி.மீ., பெய்திருந்தது. கோடை மழை சராசரி 124.20 மி.மீ., ஆனால், இந்தாண்டு 132.22 மி.மீ., பதிவானது.ஜூன் முதல் செப்., வரை பெய்யும் தென்மேற்கு பருவ மழை, முதல் இரண்டு மாதங்கள் ஏமாற்றியது. ஜூன், ஜீலை மாதங்களில், 23 மி.மீ., மழை பொழிய வேண்டும்; ஆனால், 3.4 மி.மீ., மட்டுமே பெய்தது. அதன்பின், பருவ மழை தீவிரமடைந்தது. ஆகஸ்டில் சராசரி 31.94 மி.மீ., மழை பெய்தது. நடப்பு ஆண்டு 101.83 மி.மீ., பெய்தது. செப்டம்பரில் சராசரி மழையளவு, 51.54 மி.மீ., இம்மாதம் 29ம் தேதி காலை வரை, 118.6 மி.மீ., பெய்துள்ளது.வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், 'தென்மேற்கு பருவ மழை, துவக்கத்தில் பாசன ஆதாரமாக உள்ள அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்தது. அதனால், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நிலப்பகுதிகளில் போதிய மழை பெய்யாததால், வேளாண் சாகுபடி செய்ய முடியவில்லை.கடைசி இரு மாதங்கள், இயல்பை விட கூடுதலாக பெய்துள்ளதால், நிலைப்பயிர்கள் மற்றும் சாகுபடி பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். புதிதாக கூடுதல் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வட கிழக்கு பருவ மழையும் பெய்தால், கூடுதல் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ள வசதியாக அமையும்,' என்றனர்.
திருப்பூரின் ஆண்டு சராசரி மழையளவு 602.45 மி.மீ., 2012ல், 365.29 மி.மீ., 2013ல், 263.88 மி.மீ., பெய்திருந்தது. கோடை மழை சராசரி 124.20 மி.மீ., ஆனால், இந்தாண்டு 132.22 மி.மீ., பதிவானது.ஜூன் முதல் செப்., வரை பெய்யும் தென்மேற்கு பருவ மழை, முதல் இரண்டு மாதங்கள் ஏமாற்றியது. ஜூன், ஜீலை மாதங்களில், 23 மி.மீ., மழை பொழிய வேண்டும்; ஆனால், 3.4 மி.மீ., மட்டுமே பெய்தது. அதன்பின், பருவ மழை தீவிரமடைந்தது. ஆகஸ்டில் சராசரி 31.94 மி.மீ., மழை பெய்தது. நடப்பு ஆண்டு 101.83 மி.மீ., பெய்தது. செப்டம்பரில் சராசரி மழையளவு, 51.54 மி.மீ., இம்மாதம் 29ம் தேதி காலை வரை, 118.6 மி.மீ., பெய்துள்ளது.வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், 'தென்மேற்கு பருவ மழை, துவக்கத்தில் பாசன ஆதாரமாக உள்ள அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்தது. அதனால், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நிலப்பகுதிகளில் போதிய மழை பெய்யாததால், வேளாண் சாகுபடி செய்ய முடியவில்லை.கடைசி இரு மாதங்கள், இயல்பை விட கூடுதலாக பெய்துள்ளதால், நிலைப்பயிர்கள் மற்றும் சாகுபடி பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். புதிதாக கூடுதல் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வட கிழக்கு பருவ மழையும் பெய்தால், கூடுதல் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ள வசதியாக அமையும்,' என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment