Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
சீரகாப்பாடி அருகே தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் தாங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார்கள். இந்த மாணவர்கள் விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளை வைத்துள்ளனர். இதனை ஒரிரு மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது தொடர்பாக ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் வழக்குப்பதிவு செய்து சேலம் நெத்திமேடு பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 23), அதே பகுதியை சேர்ந்த ஜான்பாட்ஷா (22) ஆகியோரை கடந்த வாரம் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சேலம் தாதகாப்பட்டி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த சேகர் மகன் பிரசாந்த் (வயது 16) மற்றும் காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த சந்தோஷ் மகன் ஆனந்த் (19) ஆகிய மேலும் 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 3 விலையுயர்ந்த ஆடம்பர மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

0 comments: