Tuesday, September 06, 2016
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
"யெஸ்' வங்கி என்ற பெயரில் தனியார் வங்கி ஒன்று கம்பெனி பதிவுச் சட்டத்தில் பதிவு செய்து, கடந்த 2004 முதல் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று நாடு முழுவதும் கிளைகள் அமைத்துச் செயல்பட்டு வருகிறது.
இதே பெயரில் "ஏபிஎஸ்' என்ற எழுத்துக்களை நடுவில் சேர்த்துக் கொண்டு, "யெஸ் ஏபிஎஸ் வங்கி' என்ற பெயரில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி எதிரே நேரு நகர் பேருந்து நிறுத்தம் அருகே ஒரு வங்கிக் கிளை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த "யெஸ்' வங்கியின் சேலம் கிளை மேலாளரும், துணைத் தலைவருமான ஜி.எஸ். சசிக்குமார் என்பவர் கடந்த மாதம் இங்கு வந்து வங்கிக் கிளையைப் பார்வையிட்டுள்ளார்.
அப்போது, தங்களது வங்கிப் பெயரைப் போலியாகப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களைச் சேர்த்து வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி வசூலித்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.கங்காதரிடம் சசிக்குமார் புகார் அளித்தார். மாவட்டக் குற்றப் பிரிவுக்கு இந்தப் புகார் மாற்றப்பட்டது. குற்றப் பிரிவின் துணைக் கண்காணிப்பாளர் பி. சந்திரசேகரன் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டு, திங்கள்கிழமை 4 பேரைக் கைது செய்தனர்.
இதுகுறித்து டிஎஸ்பி சந்திரசேகரன் அளித்த பேட்டி:
"யெஸ்' வங்கியில் "வங்கித் தொடர்பாளர்' என்ற பெயரில் முகவரைப் போன்ற பணிக்கு சோமசுந்தரம் பயிற்சி பெற்று, அதற்கான சிறிய தொகையை வைப்பு நிதியாகவும் "யெஸ்' வங்கிக்குச் செலுத்தியிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து பெயரில் சிறிய அளவிலான மாற்றங்களைச் செய்து, ஒரு போலி வங்கியை உருவாக்கியிருக்கிறார். அதற்காக எல்லா வகையான ஆவணங்களையும் அச்சிட்டு, வங்கிக் கிளைக்கான உள்கட்டமைப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்குள் 83 வாடிக்கையாளர்களைச் சேர்த்து ரூ. 1.60 லட்சம் வசூலித்துள்ளனர்.
ஒரு மாதத்துக்குள் மாட்டிக் கொண்டதால், பெரிய தொகை வசூலிக்க முடியவில்லை. "யெஸ்' வங்கியிலிருந்து ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, சில வாடிக்கையாளர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பென்னாகரம் கூர்க்காம்பட்டியைச் சேர்ந்த வீ.சோமசுந்தரம் (31), பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த ஜெ.பாலாஜி (24), நாமக்கல் மாவட்டம், தடங்கானூரைச் சேர்ந்த ஜெ. சுந்தரேசன் (22), இலக்கியம்பட்டியைச் சேர்ந்த அச்சக உரிமையாளர் முருகேசன் (48) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இதே வழக்கு தொடர்பாக நாமக்கல்லைச் சேர்ந்த ஜெயபிரபுவைத் தேடி வருகிறோம். இவர்கள் மீது 120 பி, 465, 468, 471, 482, 489, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் சந்திரசேகரன்.
சேலம், நாமக்கல்லில் வங்கிக் கிளைகள்?
போலியான இதே வங்கிப் பெயரில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலும் இவர்கள் கிளைகளை அமைத்துள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் விசாரணையில்தான் எல்லாமும் வெளியே வரும் என காவல் துறையினர் தெரிவித்தனர். புனைவாக தயார் செய்யப்பட்ட இந்த வங்கிக்கு சோமசுந்தரம் தலைமைச் செயல் அலுவலராகவும், பாலாஜி விற்பனைப் பிரிவுப் பணியாளராகவும் இருந்துள்ளனர்.
Monday, March 23, 2015
Saturday, September 20, 2014
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன பெண் அதிகாரி டாக்டர் அனுராதா. இவர், சேலம் மாவட்டத்தில் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து கலப்படம் செய்ததை பலமுறை கண்டறிந்துள்ளார். கிழங்கு மாவில் மக்காச்சோள மாவு கலந்து ஜவ்வரிசி உற்பத்தி செய்த 5–க்கும் மேற்பட்ட ஆலைகளை பூட்டி ‘சீல்‘ வைத்தவர்.
இதுபோன்ற செயலுக்காக ஒருமுறை இடமாற்றம் செய்யப்பட்டார். மீண்டும் தடை உத்தரவு பெற்று அதே இடத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்தது. அதை சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த முகமதுரபீக் என்பவர் எழுதியாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
கடிதத்தின் தொடக்கத்தில், பிறை நிலா படம் வரைந்து 786 என்ற எண் எழுதப்பட்டிருந்தது. கடிதத்தில் தொடர்ந்து கூறப்பட்டு இருப்பதாவது:–
கொண்டப்பநாயக்கன்பட்டி ஜீவா நகர் 4 வார்டில் சுமார் 19 நாய்களுக்கு விஷம் வைத்து கொன்று உள்ளோம். அதேபோல் 4–வது வார்டு மக்களையும் குடிநீரில் விஷம் கலந்து அனைவரையும் கொல்லுவோம். இவர்கள் எங்கள் தொழிலுக்கு போட்டியாக உள்ளனர். அனுராதா...,உன்னால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். நம்பிக்கை இல்லை என்றால், ஜீவா நகருக்கு நீங்கள் வந்தால் தெரியும் இந்த முகமதுரபீக் பற்றி. கண்டிப்பாக இவர்கள் பயன்படுத்தும் குடிநீர் டேங்கில் வரும் வாரம் விஷம் கலக்கப்படும். உன்னால் முடிந்தால் தடுத்துப்பார். எங்களுக்கு எதிராக யார் இருந்தாலும் அவர்களை உயிருடன் விட மாட்டோம். கண்டிப்பாக ஜீவா நகரில் ஒரு வாரத்தில் பெரிய விபரீதம் நடக்கும். கரட்டில் ஆயுத பயிற்சிக்கு இரவு நேரங்களில் வந்தால் நாய்களில் தொல்லை தாங்க முடியவில்லை. அதனால், 19 நாய்களையும் முடித்து விட்டோம். தேவையில்லாமல் பிரச்சினையில் தலையிட்டால் உன்தலை இருக்காது. நீங்கள் தான் முடிவுசெய்ய வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்த
தனக்கு வந்த கடிதத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா மாவட்ட கலெக்டர் மகரபூஷணத்திற்கு அனுப்பினார். அவர் உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கவும், கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாபுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் தெரிவிக்க உத்தரவிட்டார். மேலும் கிராம நிர்வாக அலுவலர் பாலம்மாளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவற்றிலும் டாக்டர் அனுராதா புகார் செய்தார்.
கடிதம் தொடர்பாக கொடண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாபு கூறுகையில்,‘‘மிரட்டல் கடிதம் தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. மேலும் டேங்க் ஆப்பரேட்டர்கள் விழிப்புடன் இருக்க உஷார் படுத்தப்பட்டுள்ளனர். 4 வார்டில் உள்ள மேல்நிலை நீர்தக்க தொட்டி உள்ள தண்ணீர் ஆய்வு செய்த பின்னரே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கடித்ததில் குறிப்பிட்டபடி 19 நாய்கள் இறந்துள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்‘‘ என்றார்.
அதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள குடிநீர் டேங்க்கை ஆபரேட்டர்களும், வார்டு உறுப்பினர்களும் கண்காணித்து வருகிறார்கள். கடிதத்தை எழுதியவர் யார்? என்றும், அயன்கரட்டுப்பகுதியில் ஆயுதப்பயிற்சி ஏதேனும் நடந்து வந்ததா? என்றும் கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா எடுத்து வரும் நடவடிக்கையால், அவர் மீது ஏற்பட்ட விரோதம் காரணமாக யாராவது இதுபோன்ற கடிதத்தை எழுதி இருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
Thursday, September 18, 2014
அ.தி.மு.க.-தி.மு.க.
தந்தை பெரியாரின் 136-வது பிறந்தநாள் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அவருடைய சிலைக்கு நேற்று பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அ.தி.மு.க. சார்பில் பன்னீர்செல்வம் எம்.பி., மேயர் சவுண்டப்பன், துணை மேயர் நடேசன், எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், ஜி.வெங்கடாசலம், உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.தி.மு.க. சார்பில் மாவட்ட அவைத்தலைவர் சூடாமணி தலைமையில், மாநகர செயலாளர் கலையமுதன், மாநகர துணை செயலாளர்கள் குணசேகரன், முரளி முன்னாள் மேயர் ரேகாபிரியதர்ஷினி உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
கம்யூனிஸ்டு கட்சி- பா.ம.க.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கட்சியின் மாநில தலைவர் தா.பாண்டியன் சேலத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், மாநகர செயலாளர் ராஜேந்திரன், மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ம.தி.மு.க. சார்பில் மாநகர பொறுப்பாளர் ஆனந்தராஜ் தலைமையில், லிவ்யசந்திரசேகர், தைரியசீலன்,மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பா.ம.க. சார்பில் மாநில துணைபொதுச்செயலாளர் அருள் தலைமையில், மாநகர் மாவட்ட செயலாளர் ராசரத்தினம், மாநில துணை செயலாளர் சத்ரியசேகர், மாநகர் மாவட்ட தலைவர் அன்புகரசு, மாநில நிர்வாகி முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். திராவிடர் கழகத்தின் சார்பில், மாவட்ட தலைவர் பழனிபுள்ளையண்ணன் தலைமையில், மண்டலதலைவர் சுப்பிரமணியன், மாவட்ட நிர்வாகிகள் ஜவகர், சிவக்குமார் உள்பட திரளானோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பல்வேறு அமைப்புகள்
பகுஜன்சமாஜ் கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமையில், மாவட்ட பொதுசெயலாளர் காஜாமைதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில், மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையிலும், எம்.ஜி.ஆர்.கழகம் சார்பில், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையிலும் கட்சி நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். அம்பேத்கார் மக்கள் கட்சி சார்பில் அதன் நிறுவன தலைவர் தங்கம் அம்பேத்கார் மற்றும் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அகில உலக தர்மசாஸ்தா ஐயப்பா மிஷன் சார்பில். அதன் நிறுவனர் ராஜமங்கலம் மற்றும் சக்தி ஆகியோர் மாதுளம் பழங்களால் ஆன மாலையை பெரியார் சிலைக்கு அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதுதவிர பெரியார் திராவிடர் கழகம் உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் திரளானோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தமிழ்சங்கம்
சேலம் தமிழ்சங்கத்தின் சார்பில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க தலைவர் மாணிக்கம், துணை தலைவர் ராஜ்மோகன், செயலாளர் குமரவேலு, துணை செயலாளர் சங்கரன் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Wednesday, September 17, 2014
Wednesday, September 10, 2014
Saturday, September 06, 2014
Friday, September 05, 2014
Total Pageviews
News
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...