Wednesday, September 17, 2014
சேலம் அருகே ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவி சில்மிஷம் செய்யப்பட்டது தொடர்பாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
கல்லூரி மாணவி
கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் கீர்த்திகா(வயது 22, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பெங்களூரில் உள்ள கல்லூரியில் பி.பி.எம். படித்து வருகிறார். கீர்த்திகா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் கேரள மாநிலத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.
அங்கு அவர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நேற்று குடும்பத்தினருடன் மீண்டும் பெங்களூர் திரும்பினார். கீர்த்திகா மற்றும் அவரது குடும்பத்தினர் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூர் செல்லும் கொச்சிவேளி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.
அதே பெட்டியில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ் மகன் அஜித்(வயது 26) என்பவர் பயணம் செய்தார். இவர் ராணுவத்தில் சமையல்காரராக திரிபுரா மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். அந்த ரெயில் சேலம் அருகே வந்த போது, அஜித் பக்கத்து சீட்டில் இருந்த மாணவி கீர்த்திகாவிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அவர் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த ரெயில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் வந்ததும் கீர்த்திகா இதுதொடர்பாக சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் விசாரணை நடத்தினார். இதையடுத்து மாணவியை சில்மிஷம் செய்ததாக அஜித்தை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கைதான ராணுவ வீரருக்கு கடந்த 8–ந் தேதி தான் திருமணம் நடந்தது. ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக புதுமாப்பிள்ளையான ராணுவ வீரர் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...

0 comments:
Post a Comment