Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
சிவகங்கை நகர் தெப்பக் குளத்திற்கு மழை தண் ணீர் வரும் வரத்துக் கால் வாய் சீரமைக்கப்பட்டது.
தெப்பக்குளம்
சிவகங்கை நகரின் மையப் பகுதியில் புகழ்பெற்ற தெப்பக் குளம் உள்ளது. இந்த தெப்பக் குளம் சிவகங்கை நகர் முதன் முதலில் உருவானபோது அமைக்கப்பட்டது. இந்த தெப்பக்குளத்திற்கு தண்ணீர் தற்போது கலெக்டர் அலுவலக வளாகம் அமைந்துள்ள பகுதி யில் இருந்து மழைபெய்யும் காலங்களில் வரத்துக்கால் வாய் மூலமாக வந்து சேரும்.
சமீபகாலமாக இந்த வரத்துக் கால்வாய் முழுமை யாக அடைப்பட்டதால் தெப் பக்குளத்திற்கு மழைநீர் கிடைக் காத நிலை இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து நக ராட்சி சார்பில் இந்த வரத் துக்கால்வாயை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
சீரமைப்பு
நகராட்சி ஊழியர்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு தெப்பக்குளத்திற்கு மழை நீர் வரும் வரத்துக் கால்வாயில் தேங்கி கிடந்த மண் மற்றும் குப்பைகளை அகற்றி வரத்துக்கால்வாயை சீரமைக்கும் பணியில் ஈடு பட்டனர். நகராட்சி தலைவர் அர்ச்சுனன், ஆணையாளர் சரவணன், பொறியாளர் குருசாமி, சுகாதார அதிகாரி ராஜ் மோகன் மற்றும் அதி காரிகள் இந்த பணியினை பார்வை யிட்டனர்.

0 comments: