Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
வல்லனி, வண்டவாசி கண்மாய் பகுதியில் தனி நபருக்கு பட்டா வழங்க கூடாது என்று கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
தனிநபருக்கு பட்டா
சிவகங்கையை அடுத்த வல் லனி மற்றும் வண்டவாசி கிராம மக்கள் கலெக்டர் ராஜா ராமனிடம் கொடுத் துள்ள மனுவில் கூறியிருப்பதா வது:–
வல்லனி மற்றும் வண்டவாசி கிராம கண்மாய் மூலமாக சுமார் 1,500 ஏக்கர் விவசாய நிலம் பயன் அடைந்து வரு கிறது. இந்த நிலையில் இந்த கண்மாயில் நீர்பிடிப்பு பகுதி மற்றும் வல்லனி சுடுகாட்டு பகுதி அடுத்தடுத்து உள்ளது.
தற்போது இந்த இடத்தை சில தனிநபர்களுக்கு பட்டா கொடுக்க முயற்சி செய்து வருகின்றனர். அவ்வாறு பட்டா கொடுத்தால் இந்த பகுதி விவசாயம் பாதிக்கப் படும். எனவே விவசாயத்தை நம்பியுள்ள இந்த பகுதி மக்களுக்கு உதவிடும் வகையில் இந்த இடத்தை தனிநபர்களுக்கு பட்டா கொடுக்க கூடாது.
எப்போதும் போல பொது மக்களின் பயன்பாட்டுக்கு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள் ளனர்.

0 comments: