Saturday, September 20, 2014
கிராமப்புற தபால் ஊழியர்கள் உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர், பென்சனருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், வாரிசு நியமனத்தில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேலம் பழைய பஸ்நிலையம் அருகேயுள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர்கள் ரவீந்திரன், சக்திவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். ஓய்வூதிய சங்கத்தின் செயலாளர் சண்முகம், நிர்வாகிகள் நேதாஜிசுபாஷ், ஜெயராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தபால்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு துறையில் தனியார்மயம், காண்ட்ராக்ட் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், ரூ.3500 போனஸ் உச்சவரம்பை நீக்கி வாங்கும் சம்பள அடிப்படையில் போனஸ் வழங்க வேண்டும், 7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை 1.1.2014 முதல் அமல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment