Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
கிராமப்புற தபால் ஊழியர்கள் உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர், பென்சனருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், வாரிசு நியமனத்தில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேலம் பழைய பஸ்நிலையம் அருகேயுள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர்கள் ரவீந்திரன், சக்திவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். ஓய்வூதிய சங்கத்தின் செயலாளர் சண்முகம், நிர்வாகிகள் நேதாஜிசுபாஷ், ஜெயராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தபால்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு துறையில் தனியார்மயம், காண்ட்ராக்ட் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், ரூ.3500 போனஸ் உச்சவரம்பை நீக்கி வாங்கும் சம்பள அடிப்படையில் போனஸ் வழங்க வேண்டும், 7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை 1.1.2014 முதல் அமல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

0 comments: