Saturday, September 20, 2014
வாழப்பாடி அருகே பிரபல திருடர்கள் 3 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் சிக்கினார்
வாழப்பாடி அருகே உள்ள பேளூரில் ஓட்டல் நடத்தி வருபவர் பாலமுருகன். இவர் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு சோளக்காட்டு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சோளக்காட்டின் நடுவே சந்தேகப்படும்படியாக ஒரு வாலிபர் குடிபோதையில் படுத்திருந்தார். இதுகுறித்து அவர், உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு தகவல் கூறினார். அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரது சட்டை பாக்கெட்டில் குறிப்பிட்ட ஒரு ஓட்டலின் கடன் அட்டை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து நடந்த விசாரணையில் அவன், விழுப்புரம் மாவட்டம் மேல்வள்ளியூர் கிராமத்தைச்சேர்ந்த பிரபல திருடன் கோவிந்தன் (வயது 24) என்பதும், அவனது கூட்டாளிகள் குமரவேல் (23), குமார் (18) ஆகிய 2 பேரும் பேளூர் பகுதியில் வசிப்பதும், 3 பேரும் சேர்ந்து அந்த பகுதியில் திருட்டில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது.
3 பேர் கைது
இதையடுத்து பொதுமக்கள் கோவிந்தனின் கூட்டாளிகளையும் அங்கு அழைத்து வந்து பொதுஇடத்தில் வைத்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கோவிந்தன் வாழப்பாடி செல்லியம்மன் கோவில் உண்டியல் உடைப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, 2 ஆண்டுகள் சிறையில் இருந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் விடுதலையாகி வந்தது தெரியவந்தது. மேலும், குமார், குமரவேல் ஆகிய 2 பேரும் பேளூர் பகுதியில் செல்போன், நகை, மோட்டார் சைக்கிள் ஆகிய திருட்டுகளில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து ஓட்டல் உரிமையாளர் பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரபல திருடர்களான இவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
0 comments:
Post a Comment