Saturday, September 20, 2014
வாழப்பாடி அருகே பிரபல திருடர்கள் 3 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் சிக்கினார்
வாழப்பாடி அருகே உள்ள பேளூரில் ஓட்டல் நடத்தி வருபவர் பாலமுருகன். இவர் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு சோளக்காட்டு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சோளக்காட்டின் நடுவே சந்தேகப்படும்படியாக ஒரு வாலிபர் குடிபோதையில் படுத்திருந்தார். இதுகுறித்து அவர், உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு தகவல் கூறினார். அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரது சட்டை பாக்கெட்டில் குறிப்பிட்ட ஒரு ஓட்டலின் கடன் அட்டை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து நடந்த விசாரணையில் அவன், விழுப்புரம் மாவட்டம் மேல்வள்ளியூர் கிராமத்தைச்சேர்ந்த பிரபல திருடன் கோவிந்தன் (வயது 24) என்பதும், அவனது கூட்டாளிகள் குமரவேல் (23), குமார் (18) ஆகிய 2 பேரும் பேளூர் பகுதியில் வசிப்பதும், 3 பேரும் சேர்ந்து அந்த பகுதியில் திருட்டில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது.
3 பேர் கைது
இதையடுத்து பொதுமக்கள் கோவிந்தனின் கூட்டாளிகளையும் அங்கு அழைத்து வந்து பொதுஇடத்தில் வைத்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கோவிந்தன் வாழப்பாடி செல்லியம்மன் கோவில் உண்டியல் உடைப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, 2 ஆண்டுகள் சிறையில் இருந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் விடுதலையாகி வந்தது தெரியவந்தது. மேலும், குமார், குமரவேல் ஆகிய 2 பேரும் பேளூர் பகுதியில் செல்போன், நகை, மோட்டார் சைக்கிள் ஆகிய திருட்டுகளில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து ஓட்டல் உரிமையாளர் பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரபல திருடர்களான இவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
- 
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
 

 
 
 
0 comments:
Post a Comment