Saturday, September 27, 2014
திருப்பூர் மாவட்டத்தில் அடுத்த மூன்று மாதங்களில் 12 கிராமங்களை சேர்ந்த 1,167 பேருக்கு விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் 2014–15–ம் நிதியாண்டுக்கான விலையில்லா வெள்ளாடுகள் வழங்க பயனாளிகளை தேர்வு செய்வது குறித்து கிராம அளவிலான தேர்வுக்குழுவுக்கு நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி முகாம் நடந்தது. முகாமுக்கு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் நாகராஜன் முன்னிலை வகித்தார். முகாமில் கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர்கள், ஊராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசும் போது கூறியதாவது:–
13,738 பயனாளிகள்
தமிழக அரசு சார்பில் கிராமப்புறங்களில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 194 கிராமங்களில் 13,738 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் 54 கிராமங்களில் 3,987 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 37 கிராமங்களில் 2,488 பேருக்கு வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
அடுத்த 3 மாதங்களில் 12 கிராமங்களில் 1,167 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக பயனாளிகளை தேர்வு செய்யும் பணி நடக்க உள்ளது. நீங்கள் பயனாளிகளை தேர்வு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களின் உறவினர்கள் (மனைவி, தாய், தந்தை, மாமனார், மாமியார், மகன், மகள், மருமகள், மருமகன்) மத்திய, மாநில அரசு மற்றும் கூட்டுறவு, அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் அங்கம் வகிக்கக்கூடாது.
இவ்வாறு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
0 comments:
Post a Comment