Saturday, September 27, 2014
திருப்பூர் மாவட்டத்தில் அடுத்த மூன்று மாதங்களில் 12 கிராமங்களை சேர்ந்த 1,167 பேருக்கு விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் 2014–15–ம் நிதியாண்டுக்கான விலையில்லா வெள்ளாடுகள் வழங்க பயனாளிகளை தேர்வு செய்வது குறித்து கிராம அளவிலான தேர்வுக்குழுவுக்கு நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி முகாம் நடந்தது. முகாமுக்கு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் நாகராஜன் முன்னிலை வகித்தார். முகாமில் கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர்கள், ஊராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசும் போது கூறியதாவது:–
13,738 பயனாளிகள்
தமிழக அரசு சார்பில் கிராமப்புறங்களில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 194 கிராமங்களில் 13,738 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் 54 கிராமங்களில் 3,987 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 37 கிராமங்களில் 2,488 பேருக்கு வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
அடுத்த 3 மாதங்களில் 12 கிராமங்களில் 1,167 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக பயனாளிகளை தேர்வு செய்யும் பணி நடக்க உள்ளது. நீங்கள் பயனாளிகளை தேர்வு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களின் உறவினர்கள் (மனைவி, தாய், தந்தை, மாமனார், மாமியார், மகன், மகள், மருமகள், மருமகன்) மத்திய, மாநில அரசு மற்றும் கூட்டுறவு, அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் அங்கம் வகிக்கக்கூடாது.
இவ்வாறு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...

0 comments:
Post a Comment