Saturday, September 27, 2014
ஐ.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் தி.மு.க.வினர் கருப்புக் கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தனர்.
தமிழ் இனப்படுகொலையில் ஈடுபட்டதுடன், வரலாறு காணாத அளவுக்கு மனித உரிமை மீறல்களை அரங்கேற்றிய இலங்கை அதிபர் ராஜபக்சே, ஐ.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் கலந்து கொள்வதை கண்டித்து டெசோ கூட்ட தீர்மானத்தின்படி, உலக தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் திருப்பூரில் தி.மு.க.வினர் கருப்புச்சட்டை அணிந்து நேற்று கண்டனம் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் மு.பெ.சாமிநாதன் கருப்புச்சட்டை அணிந்து கறுப்புக்கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தார். மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் கருப்புச்சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.
இதேபோல் திருப்பூர் மாநகர தி.மு.க. சார்பில் திருப்பூர் பெரியார், அண்ணா சிலை அருகே மாநகர செயலாளர் செல்வராஜ் தலைமையில் தி.மு.க.வினர் ராஜபக்சேவை கண்டித்து அனைவரும் கருப்புச்சட்டை அணிந்து துண்டுபிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர். மேலும் திருப்பூர் மாநகர வீதிகளில் கருப்புக்கொடி ஏற்றினர். மேலும் தி.மு.க.வினர் பலர் தங்களுடைய வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, மாநகர துணைச் செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜ், நிர்வாகிகள் மேங்கோ பழனிச்சாமி, நல்லி சண்முகசுந்தரம் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழ் இனப்படுகொலையில் ஈடுபட்டதுடன், வரலாறு காணாத அளவுக்கு மனித உரிமை மீறல்களை அரங்கேற்றிய இலங்கை அதிபர் ராஜபக்சே, ஐ.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் கலந்து கொள்வதை கண்டித்து டெசோ கூட்ட தீர்மானத்தின்படி, உலக தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் திருப்பூரில் தி.மு.க.வினர் கருப்புச்சட்டை அணிந்து நேற்று கண்டனம் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் மு.பெ.சாமிநாதன் கருப்புச்சட்டை அணிந்து கறுப்புக்கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தார். மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் கருப்புச்சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.
இதேபோல் திருப்பூர் மாநகர தி.மு.க. சார்பில் திருப்பூர் பெரியார், அண்ணா சிலை அருகே மாநகர செயலாளர் செல்வராஜ் தலைமையில் தி.மு.க.வினர் ராஜபக்சேவை கண்டித்து அனைவரும் கருப்புச்சட்டை அணிந்து துண்டுபிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர். மேலும் திருப்பூர் மாநகர வீதிகளில் கருப்புக்கொடி ஏற்றினர். மேலும் தி.மு.க.வினர் பலர் தங்களுடைய வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, மாநகர துணைச் செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜ், நிர்வாகிகள் மேங்கோ பழனிச்சாமி, நல்லி சண்முகசுந்தரம் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...

0 comments:
Post a Comment