Saturday, September 27, 2014
தாராபுரம் பஸ் நிலையத்தில் மாணவியிடம் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
தனியார் கல்லூரி
கேரள மாநிலம் குமுளி தாலுகா ரோசாப்பு கண்டம் மேட்டில் வீட்டை சேர்ந்த அஜ்மல்கான் என்பவரது மகன் முகமது சுனைல் (வயது 22). இவர் தாராபுரம் அண்ணா நகரில் தங்கி திருப்பூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் டிப்ளமோ என்ஜினீயரிங் 3–ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று மாலையில் கல்லூரி முடிந்ததும் அங்கிருந்து பஸ்சில் தாராபுரம் பஸ் நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது அதே கல்லூரியில் ஆங்கில இலக்கியம் 2–வது ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரிடம், முகமது சுனையில் செல்போன் பேட்டரியை கொடுத்து விட்டு பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
3 பேர் கொண்ட கும்பல்
இதற்கிடையில் அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் முகமது சுனைலிடம் தனியாக பேச வேண்டும் என்று அவரை ஒதுக்குப்புறமாக அழைத்து சென்று அந்த கும்பல் பயங்கரமாக தாக்கியது. அப்போது அங்கிருந்த பயணிகளும், பஸ் நிலையத்தில் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசாரும் அந்த மாணவரை மீட்டு, அந்த கும்பலை பிடிக்க முயன்ற போது அந்த கும்பலில் ஒருவர் சிக்கினார். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட வாலிபரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் தாராபுரம் கோட்டை மேட்டை சேர்ந்த கர்ணன் என்பவரது மகன் சேதுபதி (21) என்றும், இவர் பழனியில் உள்ள கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவருடன் சேர்ந்து தாக்கிய பிரதாப், துர்க்கையண்ணன் ஆகியோரையும் போலீசார் பிடித்து வந்தனர்.
வழக்குப்பதிவு
பின்னர் முகமது சுனையில் தாராபுரம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்–இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் கோபால் ஆகியோர் விசாரித்து சேதுபதி, பிரதாப், மற்றும் துர்க்கையண்ணன் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் காயம் அடைந்த முகமது சுனைலுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
தனியார் கல்லூரி
கேரள மாநிலம் குமுளி தாலுகா ரோசாப்பு கண்டம் மேட்டில் வீட்டை சேர்ந்த அஜ்மல்கான் என்பவரது மகன் முகமது சுனைல் (வயது 22). இவர் தாராபுரம் அண்ணா நகரில் தங்கி திருப்பூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் டிப்ளமோ என்ஜினீயரிங் 3–ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று மாலையில் கல்லூரி முடிந்ததும் அங்கிருந்து பஸ்சில் தாராபுரம் பஸ் நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது அதே கல்லூரியில் ஆங்கில இலக்கியம் 2–வது ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரிடம், முகமது சுனையில் செல்போன் பேட்டரியை கொடுத்து விட்டு பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
3 பேர் கொண்ட கும்பல்
இதற்கிடையில் அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் முகமது சுனைலிடம் தனியாக பேச வேண்டும் என்று அவரை ஒதுக்குப்புறமாக அழைத்து சென்று அந்த கும்பல் பயங்கரமாக தாக்கியது. அப்போது அங்கிருந்த பயணிகளும், பஸ் நிலையத்தில் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசாரும் அந்த மாணவரை மீட்டு, அந்த கும்பலை பிடிக்க முயன்ற போது அந்த கும்பலில் ஒருவர் சிக்கினார். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட வாலிபரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் தாராபுரம் கோட்டை மேட்டை சேர்ந்த கர்ணன் என்பவரது மகன் சேதுபதி (21) என்றும், இவர் பழனியில் உள்ள கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவருடன் சேர்ந்து தாக்கிய பிரதாப், துர்க்கையண்ணன் ஆகியோரையும் போலீசார் பிடித்து வந்தனர்.
வழக்குப்பதிவு
பின்னர் முகமது சுனையில் தாராபுரம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்–இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் கோபால் ஆகியோர் விசாரித்து சேதுபதி, பிரதாப், மற்றும் துர்க்கையண்ணன் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் காயம் அடைந்த முகமது சுனைலுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...

0 comments:
Post a Comment