Saturday, September 27, 2014
திருப்பூரில் தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. பள்ளி கல்வியை பாதியிலேயே விட்டவர்கள் மீண்டும் கல்வியை தொடரும் வகையில் 8–ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கும், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த தனி தேர்வர்களுக்கும் பொதுத்தேர்வு நேற்று நடைபெற்றது.
இதன்படி மாவட்டம் முழுவதிலும் இருந்து 8–ம் வகுப்பு தேர்வுக்கு 815 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் தேர்வு எழுத கே.எஸ்.சி. அரசு பள்ளி, சின்னசாமி அம்மாள் மாநகராட்சி பள்ளி ஆகிய 2 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 621 பேர் மட்டுமே நேற்று தேர்வு எழுத வந்திருந்தனர். 194 பேர் வரவில்லை. அதைபோல எஸ்.எஸ்.எல்.சி தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த 252 பேருக்கு பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் 213 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 39 பேர் வரவில்லை. பிளஸ்–2 தேர்வுக்கு விண்ணப்பித்ததிருந்த 96 பேருக்கு தாராபுரம் விவேகம் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் 74 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 22 பேர் வரவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
0 comments:
Post a Comment