Saturday, September 27, 2014
திருப்பூரில் தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. பள்ளி கல்வியை பாதியிலேயே விட்டவர்கள் மீண்டும் கல்வியை தொடரும் வகையில் 8–ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கும், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த தனி தேர்வர்களுக்கும் பொதுத்தேர்வு நேற்று நடைபெற்றது.
இதன்படி மாவட்டம் முழுவதிலும் இருந்து 8–ம் வகுப்பு தேர்வுக்கு 815 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் தேர்வு எழுத கே.எஸ்.சி. அரசு பள்ளி, சின்னசாமி அம்மாள் மாநகராட்சி பள்ளி ஆகிய 2 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 621 பேர் மட்டுமே நேற்று தேர்வு எழுத வந்திருந்தனர். 194 பேர் வரவில்லை. அதைபோல எஸ்.எஸ்.எல்.சி தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த 252 பேருக்கு பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் 213 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 39 பேர் வரவில்லை. பிளஸ்–2 தேர்வுக்கு விண்ணப்பித்ததிருந்த 96 பேருக்கு தாராபுரம் விவேகம் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் 74 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 22 பேர் வரவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...

0 comments:
Post a Comment