Saturday, September 27, 2014
எஸ்.எம்.எஸ்., ஆன்–லைன் முறை தவிர நேரிலும், தொலைபேசி மூலமும் கியாஸ் சிலிண்டரை பதிவு செய்ய வேண்டும் என்று கியாஸ் சிலிண்டர் வினியோகஸ்தர்களுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட கியாஸ் நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி பாரிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட வழங்கல் அதிகாரி கணேசசேகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு நுகர்வோர் அமைப்பினர், பொதுமக்கள், கியாஸ் சிலிண்டர் வினியோகஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:–
திருப்பூர் மாவட்டத்தில் தற்போது அனைத்து கியாஸ் சிலிண்டர் வினியோகஸ்தர்களும் எஸ்.எம்.எஸ்., ஆன்–லைன், மற்றும் தானியங்கி சேவை மூலம் மட்டுமே கியாஸ் சிலிண்டர்களை பதிவு செய்கிறார்கள். அவர்களின் அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ, தொலைபேசியில் தொடர்பு கொண்டோ பதிவு செய்ய முறையிட்டால், அங்குள்ள ஊழியர்கள் பதிவு செய்ய மறுக்கிறார்கள்.
மேலும் ஒரு சில வினியோகஸ்தர்களிடம் புதிதாக கியாஸ் சிலிண்டர் இணைப்பு பெற விண்ணப்பித்தால், சிலிண்டருடன் வேறு வீட்டு உபயோக பொருட்கள், மளிகை பொருட்கள் வாங்கக்கூறி கட்டாயப்படுத்துகிறார்கள். இதனால் மிகவும் சிரமமாக இருக்கிறது. இதுதவிர புகார்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க புத்தகம் இல்லை. வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த அறிவிப்பு பலகைகள் இருப்பதில்லை.
இவ்வாறு பல்வேறு புகார்களை அவர்கள் கூறினார்கள்.
இதைதொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி பாரிவேல் பேசும் போது கூறியதாவது:–
வாடிக்கையாளர்கள் அனைவரிடமும் செல்போன் இருக்கும் என்று கூறமுடியாது. எனவே அனைத்து கியாஸ் சிலிண்டர் வினியோகஸ்தர்களும் எஸ்.எம்.எஸ்., ஆன்–லைன் முறை தவிர நேரிலும், தொலைபேசி மூலமும் கியாஸ் சிலிண்டரை பதிவு செய்ய வேண்டும்.
அதிகாரிகளை தொடர்பு கொள்ள ஏதுவாக அவர்களின் தொலைபேசி எண்ணை பொதுமக்கள் பார்வையில் படும்படி எழுதிவைக்க வேண்டும். மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதை கட்டாய படுத்தக்கூடாது. அனைத்து அலுவலகங்களிலும் குறைகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க ஆலோசனை புத்தகம் வைத்து பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட வருவாய் அதிகாரி பாரிவேல் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...

0 comments:
Post a Comment