Thursday, September 25, 2014
மதுரையில் ஜெய்ஹிந்துபுரம், மீனாம்பிகை நகர் பகுதியில் கடந்த 19–ந் தேதி
வீட்டிற்குள் புகுந்து சகோதரர்களான கருப்புராஜ் (வயது 21), பாம்பு நாகராஜ்
(19), இவர்களை பார்க்க வந்த நண்பர் கார்த்திக்(21) ஆகிய 3 பேரும் வெட்டிக்
கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜெய்ஹிந்துபுரம் போலீசார்
வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட பழி வாங்கும் போட்டியில் 3 பேரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் குண்டுமணி, பிரேம், சவுந்தர் என்ற சவுந்தரபாண்டியன், அலெக்ஸ், மொட்டை மணி, எஸ்.மணி, சுடலைமுத்து, சித்திரைவேல் பாண்டியன் ஆகியோர் மேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இதற்கிடையில் நண்பர் பாம்பு நாகராஜை கொலை செய்தவர்களை பழிக்குப் பழியாக கொலை செய்ய ஒரு கும்பல் திருப்பரங்குன்றம் சந்திரபாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே திருப்பரங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர்.
அங்கு ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ஹார்வி பட்டியைச் சேர்ந்த இளவரசன் (23), பழங்கா நத்தம் பிரபு (21), ஜெய்ஹிந்து புரம் மருது பாண்டியன் (23), பழையனூர் பாண்டி வேல் (23) ஆகியோரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர்கள் 4 பேரையும் ஆயுதங்களுடன் போலீசார் கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
0 comments:
Post a Comment