Thursday, September 25, 2014
மதுரையில் ஜெய்ஹிந்துபுரம், மீனாம்பிகை நகர் பகுதியில் கடந்த 19–ந் தேதி
வீட்டிற்குள் புகுந்து சகோதரர்களான கருப்புராஜ் (வயது 21), பாம்பு நாகராஜ்
(19), இவர்களை பார்க்க வந்த நண்பர் கார்த்திக்(21) ஆகிய 3 பேரும் வெட்டிக்
கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜெய்ஹிந்துபுரம் போலீசார்
வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட பழி வாங்கும் போட்டியில் 3 பேரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் குண்டுமணி, பிரேம், சவுந்தர் என்ற சவுந்தரபாண்டியன், அலெக்ஸ், மொட்டை மணி, எஸ்.மணி, சுடலைமுத்து, சித்திரைவேல் பாண்டியன் ஆகியோர் மேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இதற்கிடையில் நண்பர் பாம்பு நாகராஜை கொலை செய்தவர்களை பழிக்குப் பழியாக கொலை செய்ய ஒரு கும்பல் திருப்பரங்குன்றம் சந்திரபாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே திருப்பரங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர்.
அங்கு ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ஹார்வி பட்டியைச் சேர்ந்த இளவரசன் (23), பழங்கா நத்தம் பிரபு (21), ஜெய்ஹிந்து புரம் மருது பாண்டியன் (23), பழையனூர் பாண்டி வேல் (23) ஆகியோரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர்கள் 4 பேரையும் ஆயுதங்களுடன் போலீசார் கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
*Small Gesture of Help* *CBOA RAJASTHAN* By the inspiration of our *GS Manimaran Sir* and Under the guidance of our beloved *OJS Ra...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
0 comments:
Post a Comment