Thursday, September 25, 2014

தமிழகத்தில் இனி ஆற்று மணல், தாது மணல் மற்றும் கிரானைட் எடுக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு மனித உரிமை பாதுகாப்பு மைய தலைவர் ராஜூ வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு மனித உரிமை பாதுகாப்பு மைய தலைவர் ராஜூ மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் சட்ட விரோதமாக கிரானைட் தொழில் மூலம் நடத்தப்பட்ட முறைகேடுகள் குறித்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக 90 குற்ற வழக்குகளில் 50–க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 84 குவாரிகளில் முறைகேடுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டன. ஆனால் அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர்.
தமிழகத்தில் காவிரி, தாமிரபரணி, பாலாறு, வைகை, வெள்ளாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட பல ஆறுகள் மணல் கொள்ளையர்களால் நாசமாக்கப்பட்டுள்ளன. தினமும் சுமார் 55 ஆயிரம் லாரிகளில் ஆற்று மணல் எடுக்கப்படுகிறது.
கேரளா, கர்நாடகாவில் ஆற்று மணல் எடுக்க தடை உள்ளதால் இங்கிருந்து மணல் கடத்தப்படுகிறது. எனவே தமிழகத்தில் இனி ஆற்று மணல், தாது மணல், கிரானைட் எடுக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும்.
இந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் கீழ் சிறப்பு குழு நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு திறம்பட செயல்பட உரிய கால அவகாசம், உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படுவதுடன், அவரது குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இதுவரை நடத்தப்பட்ட அனைத்து விசாரணை அறிக்கைகளையும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும். இந்த கனிம வள கொள்ளை தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்து தினந்தோறும் வழக்கு விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
மாயமான ஏர் ஏசியா QZ8501 விமானத்தின் பாகங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்கள், ஜாவா கடலில் இந்தோனேசியா மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்க...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
*Small Gesture of Help* *CBOA RAJASTHAN* By the inspiration of our *GS Manimaran Sir* and Under the guidance of our beloved *OJS Ra...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
0 comments:
Post a Comment