Thursday, September 25, 2014
சமூகத்தின் உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கப்படவேண்டியவர்கள் முதியவர்கள் ஆனால் காவல் துறையினரின் அலட்சியத்தால் கண்ணீரோடு உயிருக்கு போராடி வருகிறார் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை பகுதியை சேர்ந்த அழகம்மாள் என்கின்ற 75 வயது மூதாட்டி.
கணவர் சேர்த்து வைத்த சொத்தில் கம்பீரமாக வாழ வேண்டிய இவர் ,தனது
பேரன்கள் என்ற பெயரில் உள்ள கயவர்களால் தினம் தினம் சித்திரவதை
செய்யப்படுவதோடு, அந்த கொடூரர்களின் வெறியால் அந்த மூதாட்டியின் காதினை
அறுத்து நகைகளை பறித்து கொண்டதோடு சித்திரவதையின் உச்சகட்டமாக அந்த
மூதாட்டியை நிர்வாணப்படுத்தி தங்களது சொத்து வெறியின் உச்சத்தை
அரங்கேற்றி வருகின்றனர்.
பரிதாபத்திற்குரிய அழகம்மாளின் கணவர் பெயர் சுப்பிரமணியன் .கணவரின்
மரணத்திற்கு பிறகு அவரது சம்பாத்தியத்தில் உருவாக்கிய சொந்த வீட்டில்
சித்தையன் கோட்டை நாகப்பன் தெரு பகுதியில் வசித்து வருகிறார். அவர்களுக்கு
மூன்று
ஆண்கள் இரண்டு பெண்கள் என மொத்தம் 5 பேர் இதில் மூத்த மகன் பழனிச்சாமி
என்பவர் இறந்துவிட்டார் அவரது மகன்கள் அழகர் சாமி, முருகவேல், சுப்பையா
மற்றும் மகள்கள் பொம்மி, குட்டியம்மாள்.ஆகிய 5 நபர்களும் சேர்ந்து கொண்டு
அழகம்மாள் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியோடு அவருக்குரிய வீட்டிலேயே
வசித்துக் கொண்டும் அவர்களுக்குரிய நில புலன்களை அனுபவித்து
கொண்டும்.ஊதாரித்தனமாக வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இந்த வயதிலும் சுயமாக சமைத்து சாப்பிடும் இந்த மூதாட்டியிடம்
இருந்து சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தோடு அவரை அடித்து தினமும்
கொடுமைப் படுத்துவதோடு அந்நிய வீட்டாரோடு பேசக்கூட முடியாதபடி
வாய்ப்பூட்டு சட்டம் போடுவதோடு குடித்துவிட்டு வந்து அந்த பாட்டி
வசிக்கும் வீட்டில் அத்து மீறி நுழைந்து கண்மூடிதனமாக தாக்குகின்றனர்
இதனால்
மனம் உடைந்த அழகம்மாள் தனது இளைய மகன் அறிவகம் மூலமாக செம்பட்டி காவல்
நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்டு நீண்ட இடைவெளிக்கு
பிறகு புதிதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளர் பாலகுமார் விசாரித்து
சம்பந்தப்பட்ட நபர்கள் மீது 147,148,447,314,427,506(1) ஆகிய
பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த கையோடு எப் ஐ ஆர் ன் மீது மேல்
நடவடிக்கை எதுவும் எடுத்திடாமல் கிடப்பில் போட்டுள்ளனர்
இதுகுறித்து
கேட்க சென்றால் நான் அவர்களை கூப்பிட்டு கண்டித்து விட்டேன் ,உங்களது
பேரன் தானே ,வெளியில் பேசி தீர்த்து கொள்ளலாம் என கட்ட பஞ்சாயத்து கார
தொனியில் காவல்துறை அதிகாரிகளே பேசி வருகின்றனர் .இவ்வளவு பிரச்சனைகள்
நடந்தும் சம்பந்தப்பட்டவர்கள் ஒரு முறை கூட கைது செய்யப்படாதது ஆயிரம்
கேள்விகளை எழுப்புகிறது
இந்த பிரச்னை தொடர்பாக
மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலத்தையும்,காவல் துறை கண்காணிப்பாளர்
ஜெயச்சந்திரன் ஆகியோரை தள்ளாத வயதிலும் நேரில் சென்று மனு அளித்து விட்ட
போதிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மது அருந்தி விட்டு எப்போதும் போல்
வெளியில் திரிவது சட்டத்தை கேலிக் கூத்தாக்குகிறது.உயிருக்கு பாதுகாப்பு
அளிக்க வேண்டிய கடமையாவது காவல்துறையினர் செய்ய வேண்டாமா ?குடும்ப பிரச்னை
என ஒதுங்கினால் நாளை மூதாட்டி உயிர் போன பிறகு கை கட்டிக் கொண்டு வேடிக்கை
பார்ப்பார்களா இவர்கள் ?
பெண்களுக்கு எதிராக குற்றங்கள் தமிழகத்தில் தான் குறைந்துள்ளது என்கிற
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கூற்றுக்கே சவால் விடக்கூடிய வகையில்
செயல்படும் முதியோர் வதை செய்யும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய
வேண்டும் என்பதே அழகம்மாள் மூதாட்டியின் கடைசி மூச்சாக உள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
0 comments:
Post a Comment