Thursday, September 25, 2014

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கொழிஞ்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி, கூலித் தொழிலாளி. இவரது மகள் வீரலெட்சுமி (வயது19). வாடிப்பட்டி ஜவுளி பூங்காவில் வேலை பார்த்து வருகிறார்.
பாலமேடு, கோனபட்டியை சேர்ந்த ரவி மகன் முரளி (வயது 20). இவர்கள் இருவரும் மேட்டுப்பட்டி உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போதே காதலித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோனபட்டியில் நடைபெற்ற திருவிழாவிற்கு தோழி அழைத்ததன்பேரில் வீரலட்சுமி சென்று இருந்தார். அங்கு இருந்த முரளி, தனியாக பேச வேண்டும் என்று கூறி வீரலட்சுமியை மோட்டார் சைக்கிளில் சேந்தமங்கலம் என்ற ஊருக்கு அழைத்துச் சென்று அங்குள்ள தென்னந்தோப்புக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது திருமணம் செய்து கொள்வதாக வீரலட்சுமியிடம் முரளி உறுதி அளித்துள்ளார். ஆனால் சில நாட்கள் கழித்து திருமணம் செய்து கொள்ள முரளி மறுத்துள்ளார்.
இதுகுறித்து சமயநல்லூர் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் கற்பழிப்பு வழக்கில் முரளியை கைது செய்து, கடந்த 6–ந் தேதி மதுரை சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் வீரலெட்சுமி 2 மாத கர்ப்பிணியானார். அதனால் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி, முரளிக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து வைப்பது என்று முடிவு செய்தனர். இந்த தகவலை சிறையில் இருக்கும் முரளியிடம் தெரிவித்து அவரிடமும் சம்மதம் பெற்றதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து முரளியை ஜாமீனில் எடுத்து வீரலட்சுமியுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இதற்காக கோர்ட்டு மூலம் நடவடிக்கை மேற்கொண்டு முரளியை ஜாமீனில் வெளியே எடுத்தனர். இதையொட்டி நேற்று மாலை அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
இதைத்தொடர்ந்து அங்கு காத்திருந்த வீரலட்சுமி மற்றும் முரளியை காரில் அழைத்துக் கொண்டு சென்றனர். மிளகரனையில் உள்ள அய்யனார் கோவில் முன்பு 2 பேருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment