Thursday, September 25, 2014

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கொழிஞ்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி, கூலித் தொழிலாளி. இவரது மகள் வீரலெட்சுமி (வயது19). வாடிப்பட்டி ஜவுளி பூங்காவில் வேலை பார்த்து வருகிறார்.
பாலமேடு, கோனபட்டியை சேர்ந்த ரவி மகன் முரளி (வயது 20). இவர்கள் இருவரும் மேட்டுப்பட்டி உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போதே காதலித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோனபட்டியில் நடைபெற்ற திருவிழாவிற்கு தோழி அழைத்ததன்பேரில் வீரலட்சுமி சென்று இருந்தார். அங்கு இருந்த முரளி, தனியாக பேச வேண்டும் என்று கூறி வீரலட்சுமியை மோட்டார் சைக்கிளில் சேந்தமங்கலம் என்ற ஊருக்கு அழைத்துச் சென்று அங்குள்ள தென்னந்தோப்புக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது திருமணம் செய்து கொள்வதாக வீரலட்சுமியிடம் முரளி உறுதி அளித்துள்ளார். ஆனால் சில நாட்கள் கழித்து திருமணம் செய்து கொள்ள முரளி மறுத்துள்ளார்.
இதுகுறித்து சமயநல்லூர் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் கற்பழிப்பு வழக்கில் முரளியை கைது செய்து, கடந்த 6–ந் தேதி மதுரை சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் வீரலெட்சுமி 2 மாத கர்ப்பிணியானார். அதனால் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி, முரளிக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து வைப்பது என்று முடிவு செய்தனர். இந்த தகவலை சிறையில் இருக்கும் முரளியிடம் தெரிவித்து அவரிடமும் சம்மதம் பெற்றதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து முரளியை ஜாமீனில் எடுத்து வீரலட்சுமியுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இதற்காக கோர்ட்டு மூலம் நடவடிக்கை மேற்கொண்டு முரளியை ஜாமீனில் வெளியே எடுத்தனர். இதையொட்டி நேற்று மாலை அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
இதைத்தொடர்ந்து அங்கு காத்திருந்த வீரலட்சுமி மற்றும் முரளியை காரில் அழைத்துக் கொண்டு சென்றனர். மிளகரனையில் உள்ள அய்யனார் கோவில் முன்பு 2 பேருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
*Small Gesture of Help* *CBOA RAJASTHAN* By the inspiration of our *GS Manimaran Sir* and Under the guidance of our beloved *OJS Ra...
-
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
0 comments:
Post a Comment