Thursday, September 25, 2014

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கொழிஞ்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி, கூலித் தொழிலாளி. இவரது மகள் வீரலெட்சுமி (வயது19). வாடிப்பட்டி ஜவுளி பூங்காவில் வேலை பார்த்து வருகிறார்.
பாலமேடு, கோனபட்டியை சேர்ந்த ரவி மகன் முரளி (வயது 20). இவர்கள் இருவரும் மேட்டுப்பட்டி உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போதே காதலித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோனபட்டியில் நடைபெற்ற திருவிழாவிற்கு தோழி அழைத்ததன்பேரில் வீரலட்சுமி சென்று இருந்தார். அங்கு இருந்த முரளி, தனியாக பேச வேண்டும் என்று கூறி வீரலட்சுமியை மோட்டார் சைக்கிளில் சேந்தமங்கலம் என்ற ஊருக்கு அழைத்துச் சென்று அங்குள்ள தென்னந்தோப்புக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது திருமணம் செய்து கொள்வதாக வீரலட்சுமியிடம் முரளி உறுதி அளித்துள்ளார். ஆனால் சில நாட்கள் கழித்து திருமணம் செய்து கொள்ள முரளி மறுத்துள்ளார்.
இதுகுறித்து சமயநல்லூர் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் கற்பழிப்பு வழக்கில் முரளியை கைது செய்து, கடந்த 6–ந் தேதி மதுரை சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் வீரலெட்சுமி 2 மாத கர்ப்பிணியானார். அதனால் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி, முரளிக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து வைப்பது என்று முடிவு செய்தனர். இந்த தகவலை சிறையில் இருக்கும் முரளியிடம் தெரிவித்து அவரிடமும் சம்மதம் பெற்றதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து முரளியை ஜாமீனில் எடுத்து வீரலட்சுமியுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இதற்காக கோர்ட்டு மூலம் நடவடிக்கை மேற்கொண்டு முரளியை ஜாமீனில் வெளியே எடுத்தனர். இதையொட்டி நேற்று மாலை அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
இதைத்தொடர்ந்து அங்கு காத்திருந்த வீரலட்சுமி மற்றும் முரளியை காரில் அழைத்துக் கொண்டு சென்றனர். மிளகரனையில் உள்ள அய்யனார் கோவில் முன்பு 2 பேருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
0 comments:
Post a Comment