Thursday, September 25, 2014
உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் பள்ளிக்காவலர்கள், துப்புரவு பணியாளர்கள்
பணி நியமனங்கள் அனைத்தும் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், அரசியல்வாதிகளின்
பரிந்துரைப்படி நடந்துள்ளதாகவும், எனவே, அந்த பணி நியமனங்களை ரத்து செய்து
விட்டு அதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும்,
திருப்பரங்குன்றத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான கணேசன் என்பவர், மதுரை
ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கின் நேற்றைய விசாரணையின் போது, ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.வி.சங்கர் நேரில் ஆஜரானார். அவரிடம், விசாரணை குறித்த பல்வேறு தகவல்களை நீதிபதி எஸ்.நாகமுத்து கேட்டார். அதற்கு சி.வி.சங்கர் பதில் அளித்தார்.
அதன் பின்பு நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-
“ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.வி.சங்கரின் விசாரணை அறிக்கை திருப்தியாக இல்லை. பரிந்துரை கடிதம் கொடுத்தவர்களிடம் அவர் விசாரணை நடத்தவில்லை. பணி நியமனத்துக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலம் பேசி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்தும் முறையாக விசாரணை நடத்தவில்லை. விசாரணை சம்பந்தமாக ஐகோர்ட்டு எழுப்பி உள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு முறையாக பதில் அளிக்கப்படவில்லை. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை தென்மண்டல சூப்பிரண்டு சேவியர் தனராஜ் விசாரணை நடத்த வேண்டும். விசாரணையை 6 மாதத்துக்குள் முடித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் 8 காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தேர்வானவர்களின் பட்டியலில் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களின் பெயர்களுக்கு நேர் எதிரே எந்த அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட 2 பேரின் பெயருக்கு எதிரே ‘மெரிட்’ (தகுதி) என்றும், மற்ற 6 பேரின் பெயருக்கு எதிரே அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, அந்த 6 பேரின் பணி நியமனங்களும் ரத்து செய்யப்படுகின்றன. அடுத்த முறை நியமனங்கள் மேற்கொள்ளும் போது தகுதி அடிப்படையில் இவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
*Small Gesture of Help* *CBOA RAJASTHAN* By the inspiration of our *GS Manimaran Sir* and Under the guidance of our beloved *OJS Ra...
-
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
0 comments:
Post a Comment