Thursday, September 25, 2014
உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் பள்ளிக்காவலர்கள், துப்புரவு பணியாளர்கள்
பணி நியமனங்கள் அனைத்தும் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், அரசியல்வாதிகளின்
பரிந்துரைப்படி நடந்துள்ளதாகவும், எனவே, அந்த பணி நியமனங்களை ரத்து செய்து
விட்டு அதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும்,
திருப்பரங்குன்றத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான கணேசன் என்பவர், மதுரை
ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கின் நேற்றைய விசாரணையின் போது, ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.வி.சங்கர் நேரில் ஆஜரானார். அவரிடம், விசாரணை குறித்த பல்வேறு தகவல்களை நீதிபதி எஸ்.நாகமுத்து கேட்டார். அதற்கு சி.வி.சங்கர் பதில் அளித்தார்.
அதன் பின்பு நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-
“ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.வி.சங்கரின் விசாரணை அறிக்கை திருப்தியாக இல்லை. பரிந்துரை கடிதம் கொடுத்தவர்களிடம் அவர் விசாரணை நடத்தவில்லை. பணி நியமனத்துக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலம் பேசி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்தும் முறையாக விசாரணை நடத்தவில்லை. விசாரணை சம்பந்தமாக ஐகோர்ட்டு எழுப்பி உள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு முறையாக பதில் அளிக்கப்படவில்லை. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை தென்மண்டல சூப்பிரண்டு சேவியர் தனராஜ் விசாரணை நடத்த வேண்டும். விசாரணையை 6 மாதத்துக்குள் முடித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் 8 காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தேர்வானவர்களின் பட்டியலில் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களின் பெயர்களுக்கு நேர் எதிரே எந்த அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட 2 பேரின் பெயருக்கு எதிரே ‘மெரிட்’ (தகுதி) என்றும், மற்ற 6 பேரின் பெயருக்கு எதிரே அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, அந்த 6 பேரின் பணி நியமனங்களும் ரத்து செய்யப்படுகின்றன. அடுத்த முறை நியமனங்கள் மேற்கொள்ளும் போது தகுதி அடிப்படையில் இவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment