Thursday, September 25, 2014
உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் பள்ளிக்காவலர்கள், துப்புரவு பணியாளர்கள்
பணி நியமனங்கள் அனைத்தும் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், அரசியல்வாதிகளின்
பரிந்துரைப்படி நடந்துள்ளதாகவும், எனவே, அந்த பணி நியமனங்களை ரத்து செய்து
விட்டு அதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும்,
திருப்பரங்குன்றத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான கணேசன் என்பவர், மதுரை
ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கின் நேற்றைய விசாரணையின் போது, ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.வி.சங்கர் நேரில் ஆஜரானார். அவரிடம், விசாரணை குறித்த பல்வேறு தகவல்களை நீதிபதி எஸ்.நாகமுத்து கேட்டார். அதற்கு சி.வி.சங்கர் பதில் அளித்தார்.
அதன் பின்பு நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-
“ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.வி.சங்கரின் விசாரணை அறிக்கை திருப்தியாக இல்லை. பரிந்துரை கடிதம் கொடுத்தவர்களிடம் அவர் விசாரணை நடத்தவில்லை. பணி நியமனத்துக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலம் பேசி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்தும் முறையாக விசாரணை நடத்தவில்லை. விசாரணை சம்பந்தமாக ஐகோர்ட்டு எழுப்பி உள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு முறையாக பதில் அளிக்கப்படவில்லை. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை தென்மண்டல சூப்பிரண்டு சேவியர் தனராஜ் விசாரணை நடத்த வேண்டும். விசாரணையை 6 மாதத்துக்குள் முடித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் 8 காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தேர்வானவர்களின் பட்டியலில் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களின் பெயர்களுக்கு நேர் எதிரே எந்த அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட 2 பேரின் பெயருக்கு எதிரே ‘மெரிட்’ (தகுதி) என்றும், மற்ற 6 பேரின் பெயருக்கு எதிரே அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, அந்த 6 பேரின் பணி நியமனங்களும் ரத்து செய்யப்படுகின்றன. அடுத்த முறை நியமனங்கள் மேற்கொள்ளும் போது தகுதி அடிப்படையில் இவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
0 comments:
Post a Comment